|
|
மினுவன்கொட தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார் பிரசன்ன ரணதுங்க!
[Sunday 2016-01-24 08:00]
|
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினருமான பிரசன்ன ரணதுங்க மினுவன்கொட தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரசன்ன ரணதுங்க, மினுவன்கொட தேர்தல் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக கடமையாற்றி வருகின்றார். பிரசன்ன ரணதுங்க மட்டுமன்றி வேறும் சிலரும் தொகுதி அமைப்பாளர் பதவிகளிலிருந்து நீக்கப்பட உள்ளனர்.
|
|
|
நவக்கிரிப் பகுதியில் பாரிய நிலவெடிப்பு - யாழ்ப்பாண மக்கள் அதிர்ச்சி!
[Saturday 2016-01-23 19:00]
|
யாழ்ப்பாணம்
|
|
|
முள்ளியவளையில் உழவர் பெருவிழா ஆரம்பம்!
- கவிஞர் வைரமுத்துவும் பங்கேற்பு
[Saturday 2016-01-23 19:00]
|
வடக்கு மாகாண விவசாய அமைச்சின் உழவர் பெருவிழா இன்று பிற்பகல் முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில் ஆரம்பமானது. வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெறும் இப்பெருவிழாவில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மற்றும் சிறப்பு விருந்தினராக தமிழகத்தின் பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்துவும் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
|
|
|
சம்பந்தனின் அறிவிப்பை வரவேற்கிறது தமிழ் மக்கள் பேரவை!
[Saturday 2016-01-23 19:00]
|
தமிழ் மக்கள் பேரவை தயாரிக்கும் தீர்வுத் திட்ட வரைபு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கையளிக்கப்பட்டால், அதனைப் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறியிருப்பதை வரவேற்பதாக தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டுக் குழுவினால் இன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
|
|
பொலித்தீன் பாவனை தடையை மேலும் இறுக்குகிறது அரசாங்கம்!
[Saturday 2016-01-23 19:00]
|
20 மைக்ரோனுக்கு குறைவான பொலித்தீன் பாவனையை தடைசெய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடைமுறை கடுமையாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. சூழல் மாசடைவதை தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் லால் தர்மசிறி தெரிவித்துள்ளார்.
|
|
|
சுதந்திர தினத்தன்று உதயமாகிறதா மகிந்தவின் புதிய கட்சி?
[Saturday 2016-01-23 19:00]
|
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவான ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் எதிர்வரும் சுதந்திர தினத்தன்று புதிய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள இலங்கையின் சுதந்திர தினத்தன்று இந்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
|
|
|
இந்திய விமானந்தாங்கி கப்பலில் ஜனாதிபதி மைத்திரி!
[Saturday 2016-01-23 19:00]
|
கொழும்பு துறைமுகத்திற்கு வந்ததுள்ள இந்தியக் கடற்படையின் விமானம்தாங்கிக் கப்பல் ஐஎன்எஸ் விக்கிரமாதித்தியாவை ஜனாதிபதி சிறிசேன இன்று பார்வையிட்டுள்ளார். இதன்போது ஜனாதிபதிக்கு கப்பலில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தக் கப்பலிற்குள் சென்ற முதலாவது வெளிநாட்டு தலைவர் சிறிசேன என கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
|
|
|
சொல்ஹெய்மைச் சந்தித்தார் ரணில்!
[Saturday 2016-01-23 19:00]
|
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்மிற்கும் இடையில் சுவிட்சலாந்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு குறித்தோ, அதில் என்ன விடயங்கள் பேசப்பட்டன என்பன குறித்தோ உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. எனினும் இந்த சந்திப்பின் போது இனப்பிரச்சினைக்கான தீர்வு, தமிழ் மக்களுக்கான தீர்வு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் பேச்சு நடத்தப்படும் என்று பிரதமர் ரணில் கூறியிருப்பதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன.
|
|
|
காணிகளின் விபரங்களைத் திரட்ட யாழ். வருகிறார் பாதுகாப்புச் செயலாளர்!
[Saturday 2016-01-23 19:00]
|
முப்படையினர் வசமுள்ள காணிகளின் விவரங்களைத் திரட்டுவதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இராணுவத்தினர் வசமுள்ள காணிகளின் விடுவிப்புத் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
|
|
|
தெல்லிப்பழையில் கட்டடம் இடிந்து விழுந்து குடும்பஸ்தர் பலி!
[Saturday 2016-01-23 19:00]
|
தெல்லிப்பழை, பட்டிக்கடவை பகுதியில் வீடு ஒன்றின் திருத்த பணிகளின் போது கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.இந்தச் சம்பவம் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது. மாவிட்டபுரம் தெற்கு பட்டிகடவை கிராமத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான கோபாலகிருஸ்ணன் மயூரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவர்.
|
|
|
நலாலி தேவாலயப் படுகொலை அரசாங்கத்தின் தவறு என ஒப்புக் கொள்கிறார் சந்திரிகா!
[Saturday 2016-01-23 19:00]
|
1995ஆம் ஆண்டில் 150க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்ட நவாலித் தேவாலயம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒரு தவறான சம்பவம் என்று தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா அதற்கு அரசே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். குறித்த செய்தியை அறிந்தபோது விமானப்படையையும் இராணுவத்தையும் நோக்கி தான் உரத்துக் கத்தியதாகவும் தான் அதிர்ச்சியடைந்து குமுறியதாகவும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.
|
|
|
மற்றொரு அமெரிக்க அதிகாரி கொழும்பு வருகிறார்!
[Saturday 2016-01-23 18:00]
|
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் மற்றுமொரு அதிகாரி நாளை இரவு அல்லது நாளை மறுதினம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்துவதே இதன் நோக்கம் என தெரியவந்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சர்வதேச தகவல் வேலைத்திட்ட அலுவலகத்தின் இணைப்பு அதிகாரியர்னு மேகன் பிளிப்ஸ், என்பவரே இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக, செய்திகள் தெரிவிக்கின்றன.
|
|
|
தேசியப் பட்டியல் எம்.பியாகிறார் தௌபிக்!
[Saturday 2016-01-23 18:00]
|
தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் துணை அமைச்சர் எம்.எஸ்.தௌபீக் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தேர்தல் ஆணையாளரால் வெளியிடப்பட்டுள்ளது. ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீமின் சகோதரரான ஏ. ஆர். ஏ ஹபீஸ் தனது பதவியை இராஜினாமா செய்ததன் காரணமாக ஏற்பட்டிருந்த வெற்றிடத்திற்கே கட்சித் தலைமையினால் அவர் நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
|
|
|
ஜனாதிபதியின் கருத்து அதிர்ச்சி அளிக்கிறது!
- யாஸ்மீன் சூகா
[Saturday 2016-01-23 09:00]
|
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் சந்தேகம் நிலவுவதாகவும், வெளிநாட்டு நீதவான்களின் உதவி பெற்றுக் கொள்ளப்படாது எனவும் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன வெளியிட்ட கருத்து அதிர்ச்சியளிப்பதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யாஸ்மீன் சூகா தெரிவித்துள்ளார்.
|
|
|
ஜெனிவா தீர்மானம் குறித்து ஆராய வருகிறார் ஜப்பானிய விசேட பிரதிநிதி!
[Saturday 2016-01-23 09:00]
|
ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து ஆராய்வதற்கு ஜப்பான் விசேட பிரதிநிதியொருவர் இலங்கை விஜயம் செய்யவுள்ளார். தீர்மானம் குறித்து பேச்சு நடத்தி நடைமுறைச் சாத்தியமான ஓர் திட்டமொன்றை உருவாக்கும் முயற்சியில் ஜப்பானின் விசேட பிரிதிநிதி மெத்து நெபூச்சீ எதிர்வரும் 24ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
|
|
|
மக்கள் ஆணைக்கேற்ப செயற்பட தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் முடிவு!
[Saturday 2016-01-23 08:00]
|
புதிய அரமைப்பு உட்பட அனைத்து விடயங்களிலும் மக்கள் ஆணைக்கேற்ப செயற்பட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சியின் முன்னாள் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா ஆகியோரின் தலைமையில் வவுனியா 'வன்னி இன்' விருந்தினர் விடுதியில் நேற்றுக் காலையிலிருந்து மாலை வரை நடைபெற்றது.
|
|
|
இலங்கைக்குத் தொடர்ந்து உதவ ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம்!
[Saturday 2016-01-23 08:00]
|
இலங்கையில் ஜனநாயகம் மற்றும் உரிமைகள் தொடர்பில் பாரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி, இலங்கைக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் நாக்கோஆ சுவிட்ஸர்லாந்து டேவோவில் இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இதனை தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் தாம் இலங்கைக்கு விஜயம் செய்து இலங்கையின் தேவைகள் குறித்து கலந்துரையாடல் நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
|
|
|
மூன்றாவது பிள்ளை பெற்றுக் கொள்ளும் படையினருக்கான வெகுமதியை நிறுத்தியது அரசு!
[Saturday 2016-01-23 08:00]
|
மூன்றாவது பிள்ளையைப் பெற்றுக் கொள்ளும் படையினருக்கு வழங்கப்பட்டு வந்த ஒரு லட்சம் ரூபா கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கம் படைவீரர்களுக்கு நன்றி பாராட்டும் வகையில் இந்த கொடுப்பனவை வழங்கியிருந்தது.
எனினும், இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முப்படை மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றில் கடமையாற்றி வருவோருக்கு பிறக்கும் மூன்றாவது பிள்ளைக்கு வழங்கப்பட்டு வந்த ஒரு லட்சம் ரூபா கொடுப்பனவிற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
|
|
|
யாழ்ப்பாண இளைஞர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
[Saturday 2016-01-23 08:00]
|
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் இரவு 7.45 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விமான நிலையப் பிரிவினராலேயே இவர் கைது செய்யப்பட்டதாக கட்டுநாயக்கப் பொலிஸார் தெரிவித்தனர்.
|
|
|
கொண்டு செல்ல பணம் இல்லாததால் யாழ். வைத்தியசாலையில் இரண்டு நாட்கள் காத்திருந்த சடலம்!
[Saturday 2016-01-23 08:00]
|
குடும்ப வறுமையால் இறந்தவரின் சடலம் இரு நாட்கள் யாழ். போதனா வைத்தியசாலையிலேயே காத்திருக்க வேண்டி நிலை ஏற்பட்டது. முல்லைத்தீவு - மல்லாவி - பாலையடியைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான இரத்தினம் சூசைராசா (வயது 56) என்பவரின் சடலமே வீட்டின் வறுமைச் சூழ்நிலையால் இவ்வாறு வைத்தியசாலையிலேயே காத்துக் கிடந்தது. காய்ச்சல் மற்றும் நெஞ்சு சளியால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 18 ஆம் திகதி சிகிச்சைக்காக மல்லாவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
|
|
|
போர் பற்றிய புலனாய்வு இரகசியங்கள் அடங்கிய ஆவணங்கள் ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் கையில்!
[Saturday 2016-01-23 08:00]
|
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் போர் இரகசியங்களை தெரிந்து கொள்ள முயற்சித்துள்ளார் என திவயின செய்தி வெளியிட்டுள்ளது. இராணுவத்தினரின் இரகசியங்கள் மற்றும் ஆழ ஊடுருவித் தாக்கும் படைப் பிரிவு, விசேட படையணிகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடம் தகவல்களைப் பெற்றுக் கொள்ள ஹூசெயன் முயற்சித்துள்ளார். வெளிவிவகார அமைச்சிற்கு அனுப்பி வைத்திருந்த கடிதம் ஒன்றின் ஊடாக ஹூசெய்ன் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார். எனினும், வன்னிப் போர் தொடர்பிலான அனைத்து புலனாய்வுத் தகவல்கள் மதிப்பீடுகளையும் பெற்றுக்கொள்ள ஹூசெய்ன் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது.
|
|
|
ஊழல் செய்தவர்களைத் தண்டிப்பதில் தாமதம்!
- சம்பிக்கவும் விசனம்
[Saturday 2016-01-23 08:00]
|
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை தண்டிப்பதற்கு காலதாமதமாவது அதிருப்தியை அளிப்பதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட நபர்களை தண்டிப்பதில் தற்போதைய அரசாங்கம் தெளிவான காலதாமதத்தை வெளிப்படுத்தியுள்ளது. இந்த காரணத்தினால் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை புதிய அரசாங்கம் தண்டிக்கும் என்ற மக்கள் எதிர்பார்ப்பு சிதைந்துள்ளது.
|
|
|
கூட்டு எதிர்க்கட்சியை சிதைக்க இரகசிய சதியாம்!
- கம்மன்பில கூறுகிறார்
[Saturday 2016-01-23 08:00]
|
கூட்டு எதிர்க்கட்சியை சிதைப்பதற்கு இரகசிய சதித் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு நெருக்கமான தரப்புக்கள் இவ்வாறு கூட்டு எதிர்க்கட்சியை சிதைக்க முயற்சிக்கின்றன. கூட்டு எதிர்க்கட்சியினால் உருவாக்கப்பட உள்ள அரசியல் முன்னணியின் தலைவர் யார் என்பதனை இன்னமும் கூட்டு எதிர்க்கட்சியின் தலைமைத்துவ குழு தீர்மானிக்கவில்லை.
புதிய அரசியல் முன்னணியின் தலைமை பதவி தொடர்பில் நெருக்கடி நிலைமை காணப்படுவதாக பிரச்சாரம் செய்து அதன் ஊடாக கூட்டு எதிர்க்கட்சியை சிதைக்க சிலர் முட்டாள்தனமாக முயற்சிக்கின்றனர்.
|
|
|
யாழ்ப்பாணத்தில் முதலமைச்சரைச் சந்தித்தார் கவிப்பேரரசு வைரமுத்து!
[Friday 2016-01-22 20:00]
|
வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரனை கவிப்பேரரசு வைரமுத்து சந்தித்துப் பேசினார். இன்று மாலை 7 மணியளவில், வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. வட மாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் நாளை வித்தியானந்தா கல்லூரி வளாகத்தில் உழவர் விழா இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் கவிப்பேரரசு வைரமுத்து சிறப்பு விருந்தினராக அவர் பங்கேற்கவுள்ளார்.
|
|
|
முதலமைச்சரைச் சுதந்திரமாக செயற்பட அனுமதிக்கக் கோரி யாழ். நகரில் இளைஞர் உண்ணாவிரதம்!
[Friday 2016-01-22 19:00]
|
வடமாகாண முதலமைச்சரை சுதந்திரமாக செயற்பட விடுங்கள், என கோரி இளைஞர் ஒருவர், யாழ்.நகரில் தந்தை செல்வா நினைவுச் சதுக்கத்தின் முன்பாக கவனயீர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று நடத்தினார். வரணி பகுதியை சேர்ந்த நா.துஷாந்த் என்ற இளைஞனே இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை இன்று காலை 8 மணிக்கு ஆரம்பித்தார்.
|
|
|
வவுனியாவில் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்!
[Friday 2016-01-22 19:00]
|
தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில் இன்று இடம்பெற்றது. வவுனியா வன்னி-இன் விந்தினர் விடுதியில்
இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகிய இந்த கூட்டம் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் மேலும் பலர் கலந்து கொண்டனர்.
|
|
|
கொழும்பு வந்த இந்திய விமானந்தாங்கிக் கப்பலை பார்வையிட்ட அமைச்சர்கள், படை அதிகாரிகள்!
[Friday 2016-01-22 19:00]
|
கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை தந்துள்ள இந்தியக் கடற்படையின்
|
|
|
நல்லாட்சியின் நரித்தனங்கள் !!
[Friday 2016-01-22 19:00]
|
சிறிலங்காவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினை 'நல்லாட்சி' என பிரகடனப்படுத்திய சிங்கள தேசத்தின் புதிய ஆட்சியாளர்கள், அதன் ஓராண்டு நிறைவினை கோலாகலமாக கொண்டாடுகின்றனர். நல்லாட்சியின் நாயகனாக சிறிலங்காவின் அரசுத் தலைவர் மைத்திரி சித்திரிக்கப்படுகின்றார். ஆட்ட நாயகனாக ரணில் விக்கரமசிங்கே இருக்கின்றார்.
போருக்கு பிந்திய இலங்கைத்தீவில் தனது பிரசன்னத்தினை உறுதிப்படுத்த இனநல்லிணக்கம், பொறுப்புகூறல் என்ற பெயர்களில் ஜெனீவாவில் களத்தினை திறந்த மேற்குலகம், கொழும்பு நோக்கி படையெடுத்தது ஜெனீவாக் களமுனையின் இறுக்கம், அனைத்துலக அரங்கில் இருந்து சிறிலங்கா தனிமைப்படுத்தப்படுகின்ற நிலை தோன்ற விழித்துக் கொண்டது சிங்கள அரசு.
|
|
|
|