Untitled Document
April 29, 2024 [GMT]
தெல்லிப்பளையில் 948 ஏக்கர் காணியை விடுவிக்க அமைச்சரவை அங்கீகாரம்!
[Thursday 2016-01-07 19:00]

யாழ்ப்பாணம் - தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 948 ஏக்கர் காணியை விடுவிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ண தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் ராஜித்த சேனாரட்ண இவ்வாறு தெரிவித்தார். இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


தமிழினி எழுதிய நூல் பெப்ரவரியில் வெளியாகிறது!
[Thursday 2016-01-07 19:00]

விடுதலைப் புலிகளின் அரசியல்துறை மகளிர் பொறுப்பாளராக இருந்த தமிழினி என்ற சுப்ரமணியம் சிவகாமி எழுதிய நூல் எதிர்வரும் பெ்பரவரி மாதம் தமிழில் வெளியிடப்பட உள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நூலின் சிங்கள மொழிப்பெயர்ப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட உள்ளது.


நம்பிக்கையில்லாப் பிரேரணை - முதலமைச்சருக்குத் தெரியாதாம்!
[Thursday 2016-01-07 19:00]

நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கோப்பாய் கல்வியியல் கல்லூரியில் நியமன கடிதங்கள் வழங்கும் வைபவம் வடமாகாண முதலமைச்சர் தலைமையில் இன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வை தொடர்ந்து முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படவுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


தண்டவாளத்தில் படுத்துறங்கிய காவலாளி ரயில் மோதி மரணம்! Top News
[Thursday 2016-01-07 19:00]

தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று இரவு பயணித்த ரயில் மோதி ரயில்வே பாதுகாப்பு கடவையில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்ட காவலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் புதுக்கமம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட தேத்தாவாடி மதுரங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான நாகலிங்கம் சிவகுமாரன்(வயது-36) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


சித்திரவதை முகாம் தகவல் பொய்யானது என்கிறார் அமைச்சர் ராஜித!
[Thursday 2016-01-07 18:00]

யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் சித்திரவதை முகாம் காணப்பட்டதாக ஊடகங்களில் வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இன்று நடந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.


ஜனாதிபதி மைத்திரியை கொல்ல முயன்றவருக்கு பொதுமன்னிப்பு!
[Thursday 2016-01-07 18:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய முற்பட்டதான குற்றச்சாட்டில், தண்டனை விதிக்கப்பட்ட, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு, ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளது. 2005


தீவிபத்தில் உயிரிழந்த முன்னாள் போராளியின் உடல் தீயுடன் சங்கமம்! Top News
[Thursday 2016-01-07 18:00]

தீவிபத்தில் படுகாயமடைந்து கடந்த சனிக்கிழமை உயிரிழந்த கேப்பாப்புலவு மாதிரி கிராமத்தை சேர்ந்த முன்னாள் போராளியும் மூன்று பிள்ளைகளின் தாயாருமாகிய செல்வக்குமாரியின் உடல் நேற்று அக்கினியுடன் சங்கமமானது. ஈழ விடுதலைக்காக ஒரு கண்ணை இழந்த செல்வகுமாரி அதன் பாதிப்பால் மறுகண் பார்வையையும் இழந்தார்.


பாடசாலைப் படிப்பை மட்டும் நம்பி படித்த வவுனியா மாணவிக்கு மாவட்டத்தில் முதலிடம்! Top News
[Thursday 2016-01-07 18:00]

தனியார் கல்வி நிலையம் செல்லாது பாடசாலை படிப்பை மட்டுமே நம்பி, படித்த வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மாணவி அழகுசுந்தரம் ஹம்சாயினி கலைப்பிரிவில் வவுனியா மாவட்டத்தில் முதல்நிலை பெற்றுள்ளார். இது தொடர்பில் அம் மாணவி தெரிவித்ததாவது, ஆரம்ப கல்வியை சுந்தரபுரம் வித்தியாலயத்திலும், உயர்தரக் கல்வியை புதுக்குளம் மகாவித்தியாலயத்திலும் கற்றேன். வரலாறு, தமிழ், இந்துநாகரிகம் ஆகிய பாடங்களைக் கற்று 3ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் முதல்நிலை பெற்றுள்ளேன்.


இலங்கைக்கு நாசா எச்சரிக்கை!
[Thursday 2016-01-07 07:00]

இந்த ஆண்டில் எல் நினோ (El Nino) எனப்படும் காலநிலை தாக்கத்தினால் இலங்கையில் பெரும் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா எச்சரித்துள்ளது. புயல், வெள்ளம் மற்றும் வரட்சி போன்ற அனர்த்தங்களை இலங்கை இந்த வருடத்தில் எதிர்நோக்குமென நாசா குறிப்பிட்டுள்ளது.


மக்களின் குறைகளை ஜனாதிபதி மைதிரிக்கு தெரிவிக்க புதிய சேவை ஆரம்பம்!
[Thursday 2016-01-07 07:00]

இலங்கையில் வாழ்கின்ற சகல மக்களின் குறைகளையும் கேட்டறிந்து அவற்றிற்கான தீர்வுகளை உரிய அமைச்சுக்கள், அரசாங்க அலுவலகங்கள் மற்றும் திணைக்களங்களிலிருந்து அந்த மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு ஜனாதிபதி செயலகத்தினால் புதிய சேவையொன்று ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.


முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை - பொய் என்கிறார் அவைத்தலைவர்!
[Thursday 2016-01-07 07:00]

வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாகவும் அடுத்துவரும் ஒரு சில வாரங்களில் அது வட மாகாணசபையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் வெளியான செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்று அவைத் தலைவர் சீ.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.


சந்திரிகாவுடனும் பேசுகிறார் நோர்வே வெளிவிவகார அமைச்சர்!
[Thursday 2016-01-07 07:00]

நோர்வே அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடன் பேச்சு நடத்த உள்ளது. நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் போர்கே பிரன்டே ஒருநாள் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வரவுள்ளார். சந்திரிகா ஜனாதிபதியாக கடமையாற்றிய காலத்தில் நோர்வே அரசாங்கம் சமாதான முனைப்புக்களில் முக்கிய பங்காற்றியிருந்தது. 2005ம் ஆண்டிலேயே இறுதியாக நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.


பிரகீத் கடத்தல் வழக்கில் திருப்பம் - உத்தரவிட்டவரின் பெயர் அம்பலம்!
[Thursday 2016-01-07 07:00]

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போகச் செய்யப்பட்டமை தொடர்பான விசாரணையில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்படடுள்ள இரண்டு பேர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்துமாறு உத்தரவிட்ட அதிகார தலைமை யார் என்பதை வெளியிட்டுள்ளனர். இந்த கடத்தலுக்கு, முன்னைய அரசாங்கத்தின் முன்னிலை பாதுகாப்பு முக்கியஸ்தர் ஒருவரே உத்தரவிட்டுள்ளார் என்று சீஐடி சந்தேகம் வெளியிட்டுள்ளது.


பதன்கோட் தாக்குதலுக்கு இலங்கை அரசு கண்டனம்!
[Thursday 2016-01-07 07:00]

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதன்கோட் விமானப்படைத் தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை இலங்கை அரசாங்கம் கண்டித்துள்ளது. இந்த சம்பவத்தின் போது பலியான படையினரின் குடும்பங்களுக்கு இலங்கை அரசாங்கமும் மக்களும் தமது அனுதாபத்தை தெரிவிப்பதாக இலங்கை வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. பிராந்தியத்தில் பயங்கரவாதத்துக்கு எதிராக செயற்படுவதற்கு இலங்கை தொடர்ந்தும் தயாராகவுள்ளது என்றும் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.


ஐ.எஸ் அமைப்பு குறித்து படையினர் உசார் நிலையில்! - பாதுகாப்பு அமைச்சு
[Thursday 2016-01-07 07:00]

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு குறித்து பாதுகாப்பு படையினர் மிகவும் உன்னிப்பாக இருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் தமது செயற்பாடுகளை இலங்கையில் ஆரம்பிப்பது மற்றும், இலங்கையில் தோற்றம் பெறுவது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இந்நிலையில், அவர்களின் எச்சரிக்கை குறித்து, இலங்கை பாதுகாப்பு படையினர் உஷாராக இருப்பதாக பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.


சீனா செல்வது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை என்கிறார் மகிந்த!
[Thursday 2016-01-07 07:00]

சீனாவுக்கான பயணத்தை மேற்கொள்வதா, இல்லையா என்று தான் இன்னும் தீர்மானிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்‌ஷ சீனாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் எனச் செய்திகள் வெளியாகியுள்ள. இந்த நிலையில், திருமண வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.


மேலும் பல இடங்களை விடுவிக்க பாதுகாப்பு அமைச்சு இணக்கம்! - பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா தகவல்
[Thursday 2016-01-07 07:00]

நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு குந்தகம் இல்லாத வகையில், மேலும் பல இடங்களை விடுவிக்க பாதுகாப்பு அமைச்சு இணங்கியுள்ளது என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.


புலம்பெயர் புலிகளைத் திருப்திப்படுத்தவே இராணுவ அதிகாரிகள் கைது! - விமல் வீரவன்ச
[Thursday 2016-01-07 07:00]

புலம்பெயர் விடுதலைப் புலிகளை திருப்திப்படுத்துவதற்காகவே ஊடகவியலாளர் எக்னெலிகொட கடத்தல் சம்பவம் தொடர்பில் இராணுவப் புலனாய்வாளர்களை அரசாங்கம் தடுத்து வைத்துள்ளது என்று விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார். வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த இராணுவ புலனாய்வு அதிகாரிகளையும் கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் முன்னாள் தலைவர் நாலக கொடஹேவாவையும் நேற்று சென்று சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்தார்.


2015இல் கொலைகள், குற்றங்கள் குறைவு! - என்கிறார் பொலிஸ் பேச்சாளர்
[Thursday 2016-01-07 07:00]

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் கொலைகள், பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல்கள் ஒப்பீட்டளவில் குறைவடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். தற்கொலை சம்பவங்களில் அதிகரிப்பு காணப்படுவதாக தெரிவித்த அவர் பெற்றோரின் தவறினாலே பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.


ஆட்சிமாற்றத்துக்குப் பின்னரும் தமிழருக்கு எதிரான சித்திரவதைகள், ஆட்கடத்தல்கள்! - சர்வதேச அறிக்கை Top News
[Wednesday 2016-01-06 19:00]

கடந்த ஆண்டு ஜனவரியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னரும்கூட அரச ஏற்பாட்டிலான தமிழ் மக்களுக்கு எதிரான கடத்தல்கள், சித்திரவதைகள், கப்பம் மற்றும் பாலியல் வன்புணர்வுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அத்துடன் பிரிட்டன் பிரதமர் இலங்கை வந்தபோது காணாமல்போகச் செய்யப்பட்டவர்களை மீட்டுத் தருமாறு ஆர்ப்பாட்டம் செய்தவர்களும் கடத்தப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர் என்று 'உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச திட்டம்' அமைப்பு தெரிவித்துள்ளது.


ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை - இராணுவப் புலனாய்வு அதிகாரி கைது!
[Wednesday 2016-01-06 19:00]

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சார்ஜன்ட் தர அதிகாரி ஒருவர் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இவரிடம், ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. முஸ்லிம் இனத்தவரான இந்த இராணுவப் புலனாய்வு அதிகாரி கிரித்தலவில் உள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவு முகாமில் பணியாற்றி வருகிறார்.


போர் விமானக் கொள்வனவு - விமானப்படைக்குத் தெரியாதாம்!
[Wednesday 2016-01-06 19:00]

ஜே.எவ்-17 போர் விமானங்களை கொள்வனவு செய்வது தொடர்பாக பாகிஸ்தானுடன் உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது குறித்து தாம் எதனையும் அறியவில்லை என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. இலங்கை விமானப்படை பேச்சாளர் சந்திம அல்விஸ் இதனை தெரிவித்துள்ளார். தமக்கு இது குறித்து அரசாங்கம் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


6000 ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கையில் அரிசியை சாப்பிட்ட ஆதி மனிதன்! Top News
[Wednesday 2016-01-06 19:00]

6000 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் வாழ்ந்த ஆதிமனிதர்கள் அரிசியை உணவாகச் சாப்பிட ஆரம்பித்துள்ளனர் என்று அண்மைய அகழ்வாராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது. ஹோமோ சபியன்ஸ் கால மனிதர்களே இவ்வாறு அரிசியை உணவாக சாப்பிட்டுள்ளனர். பலாங்கொட- இலுக்கும்பர பிரதேசத்தில் வரலாற்றுக் காலத்துக்கு முந்திய காலத்தில் பயன்படுத்தப்பட்ட குகை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போதே இது தெரியவந்துள்ளது.


காயமுற்ற பெண் யானையை காப்பாற்ற மனிதர்களை தேடி வந்த ஆண் யானை! Top News
[Wednesday 2016-01-06 19:00]

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்குள்ளான பெண் யானையை காப்பாற்ற, மனிதர்களை வசிக்குமிடத்துக்கு தள்ளிக் கொண்டு வந்து ஆண் யானை ஒன்று தீவிர முயற்சி எடுத்த சம்பவம் வாழைச்சேனை வாகனேரி குளத்துமடு கிராமத்தில் இடம் பெற்றுள்ளது. வாகனேரி காட்டு பகுதியில் பெண் யானை ஒன்று இனந்தெரியாதோரால் சுடப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது. அந்த யானையை காப்பாற்றும் நோக்கில் ஆண் யானை ஒன்று மனித நடமாட்டம் உள்ள பிரதேசத்திற்கு பெண் யானையை தள்ளிக்கொண்டு வந்துள்ளது.


உயர்பாதுகாப்பு வலயம், தேசிய பாதுகாப்பு என்ற பெயர்களில் தமிழினப்படுகொலையின் தடயங்களை மூடிமறைக்கப்படுகின்றதா?
[Wednesday 2016-01-06 19:00]

தமிழர் தாயகத்தினை ஆக்கிரமிப்புச் செய்துள்ள சிறிலங்கா அரசாங்கம், உயர் பாதுகாப்பு வலயங்கள் என்றும், தேசிய பாதுகாப்பு என்றும் தமிழின அழிப்பின் தடயங்களை மூடிமறைக்கும் செயலில் ஈடுபட்டு வருவதனை அவதானிக்க முடிகின்றது. சமீபத்தில், முள்ளிவாய்க்கால் வட்டுவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் உடலங்கள் அப்பகுதியில் சிறிலங்கா படையினரால் புதைக்கப்பட்ட காரணத்தினாலேயே, தமது சொந்தக் காணிகளை படையினர் தரமறுப்பதோடு, அங்கிருந்து வெளியேற மறுக்கின்றனர் என்ற அப்பகுதி மக்களின் கருத்து இதனை வெளிப்படுத்தி நிற்கின்றது. இப்பகுதியில் 617 ஏக்கர் பொதுமக்களின் காணிகளை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சிறிலங்கா கடற்படையினர் அதனைச் தங்களுக்கு சொந்தமாக்கும் முனைப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


தலதா மாளிகையில் நவாஸ் ஷரிப்! Top News
[Wednesday 2016-01-06 19:00]

இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரிப் இன்று கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டார். அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் மற்றும் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க உள்ளிட்டவர்கள் பாகிஸ்தான் பிரதமரை வரவேற்றனர். பாகிஸ்தான் பிரதமருக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் தலதா மாளிகை தியவடன நிலமே பிரதிப் நிலங்க தேல பாரம்பரிய ஆடை அணிந்து விசேட வரவேற்பு செய்தார்.


விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரத் திட்டமாம்! - சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறுகிறார்
[Wednesday 2016-01-06 19:00]

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கை இல்லாபிரேரணை ஒன்றை தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள ஒரு கட்சி கொண்டு வர முயற்சிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ். ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்-


யுவதியை மிரட்டிப் பணம் பறிக்க முயன்ற இளைஞருக்கு அபராதம் செலுத்த உத்தரவு!
[Wednesday 2016-01-06 19:00]

யுவதி ஒருவரின் புகைப்படத்தை நிர்வாணமாக இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யவுள்ளதாக மிரட்டி பணம் கோரிய இளைஞனுக்கு, 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாதகால கடூழியச் சிறைத்தண்டனை வழங்கி சாவகச்சேரி மாவட்ட நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட யுவதிக்கு 25 ஆயிரம் ரூபாய் நட்டஈடாக செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா