Untitled Document
May 5, 2024 [GMT]
அமெரிக்காவுக்கு போட்டியாக சீனா தயாரித்திருக்கும் ராட்சத குண்டு.
[Friday 2019-01-04 21:00]

அமெரிக்கா உருவாக்கிய


சீனாவின் பிரபல தொடர் கொலையாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்.
[Friday 2019-01-04 21:00]

சீனாவில் பிரபல சீரியல் கில்லராக இருந்த காவோ சென்னிங்கோங் என்பவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து சீன ஊடகங்கள், சீனாவில் 1988-ம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரை சீனாவின் பல்வேறு இடங்களில் குழந்தைகள் மற்றும் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததற்காக காவோ நீண்ட வருடங்களாக போலீஸாரால் தேடப்பட்டு வந்தார்.


மெக்சிகோவில் மேயர் பதவியேற்ற நபர் சில மணி நேரங்களில் சுட்டு கொல்லப்பட்டார்.
[Friday 2019-01-04 09:00]

மெக்சிகோவின் ஆக்சகா மாநிலம், டிலாக்சியாகோ நகர மேயராக அலெஜாண்டரோ அபார்சியோ என்பவர் கடந்த ஒன்றாம் தேதி பதவியேற்றார். அவர், பதவியேற்ற சில மணி நேரங்களில், கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக, அங்குள்ள அரங்கத்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.


பாகிஸ்தான் எதிரிகளுக்கு அடைக்கலம் தருகிறது - டிரம்ப் பேச்சு.
[Friday 2019-01-04 09:00]

உலகளாவிய பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவின் கூட்டாளியாக பாகிஸ்தான் உள்ளது. இதற்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆண்டுதோறும் நிதி உதவி அளித்து வந்தது. ஆனால் அந்த நிதியை பாகிஸ்தான் பெற்றுக்கொண்டு, தனது சொந்த நாட்டில் உள்ள பயங்கரவாத அமைப்புகளை பாரபட்சமின்றி ஒடுக்கத்தவறி விட்டது என்பது அமெரிக்காவின் கருத்தாக உள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானை வெளிப்படையாக கண்டித்த ஜனாதிபதி டிரம்ப், பாகிஸ்தானுக்கு அளித்து வந்த கோடி கணக்கிலான நிதி உதவியை நிறுத்தினார். கடந்த நவம்பர் மாதம் ஆப்கானிஸ்தானுக்கான புதிய கொள்கையை வெளியிட்ட டிரம்ப், பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் பாகிஸ்தான் இரட்டை வேடம் போடுவதாகவும், அந்நாட்டுக்கு வழங்கப்பட்டு வரும் 1.3 பில்லியன் டாலர் (சுமார் ரூ.9 ஆயிரத்து 100 கோடி) நிதி நிறுத்தப்படுவதாக அறிவித்தார்.


சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - மக்கள் வீதிகளில் தஞ்சம்.
[Friday 2019-01-04 09:00]

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.3 புள்ளிகளாக பதிவானதாகவும், பூமிக்கு அடியில் 15 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் சீன நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்தது. சுமார் 10 வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகள், வணிக வளாகங்களில் இருந்து அலறி அடித்துக்கொண்டு வெளியேறினர்.


என்ன நடக்கிறது அமெரிக்காவில்! - "முரண்டு பிடிக்கும் டிரம்ப், பரிதவிக்கும் மக்கள்".
[Thursday 2019-01-03 21:00]

அமெரிக்காவில் தொடர்ந்துவரும் அரசு செயல்பாடு முடக்கம், அந்நாட்டில் மோசமான விளைவுகளைஏற்படுத்தி வருகிறது. மெக்ஸிகோ எல்லையில் சுவர்கட்டும் அதிபர் டிரம்பின் திட்டத்துக்கு நிதி ஒதுக்க காங்கிரஸ் மறுத்து வரும் நிலையில் ஏற்பட்ட சிக்கலால், பல்வேறு அரசுத் துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான நிதி மசோதா நிறைவேற்றப்படாமல் அரசுப் பணிகள் முடக்கம் நடந்துவருகிறது.


சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் முக்கிய திருப்பம்.
[Thursday 2019-01-03 21:00]

ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சௌதி தலைநகரான ரியாத்தில் 11 பேர் மீது வழக்கு விசாரணை துவங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. பிரதிவாதிகள் ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என அரசு வழக்குரைஞர் வாதாடியுள்ளார். பிரபல பத்திரிகையாளரான கஷோக்ஜி சௌதி அரசு மீது விமர்சனங்களை வைத்து வந்தார். கடந்த வருடம் அக்டோபர் 2-ம் தேதி துருக்கி நாட்டின் இஸ்தான்புல்லில் உள்ள சௌதி தூதரகத்தில் நுழைந்தபின்னர் உயிருடன் வெளியே வரவில்லை. சௌதிக்கு கஷோக்ஜியை திருப்பி வர வைப்பதற்காக அனுப்பப்பட்ட ஊழியர்கள் மேற்கொண்ட ஒரு முரட்டுத்தனமான நடவடிக்கையில் கஷோக்ஜி கொல்லப்பட்டதாக அரசு வழக்குரைஞர்கள் தெரிவிக்கின்றனர். இஸ்தான்புல்லுக்குச் சென்று கொலை செய்த 15 சந்தேக ஊழியர்கள் உள்பட கஷோக்ஜி கொலை வழக்கு விசாரணைக்காக 18 சந்தேக நபர்களை ஒப்படைக்குமாறு துருக்கி விடுத்திருந்த கோரிக்கையை சௌதி அரேபியா நிராகரித்துள்ளது.


'க்ரூட் சாலட்' பாலத்தின் மூன்று வருட சாலை புதுப்பித்தல் - ரிவர் வொல்லி வீதி மூடப்படும்.
[Thursday 2019-01-03 21:00]

க்ரூட் சாலட் பாலத்தின் மூன்று வருட சாலை புதுப்பித்தல் திட்டத்தின் ஒரு பகுதியாக அதன் கீழ் உள்ள ரிவர் வொல்லி வீதி இன்று (வியாழக்கிழமை) முதல் மூடப்படுவதாக நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாலம் கீழ் உள்ள பகிர்வு-பயன்பாட்டு பாதை மற்றும் வடமேற்கு பகுதியில் இருந்து பாலத்தை நோக்கி செல்லும் பாதைகளே மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 10 வருடங்களில் எட்மண்டனில் 3 ஆவது முறையாக உயர் வெப்பநிலை பதிவு!
[Thursday 2019-01-03 21:00]

எட்மண்டனில் கடந்த மாதங்களாக குளிர்காலநிலை நிலவிவந்த நிலையில் இந்த ஆண்டு அதிக வெப்பநிலை கொண்ட நாளாக ஜனவரி 2 ஆம் திகதி பதிவாகியுள்ளது. கடந்த 10 ஆண்டில் எட்மண்டனில் பூஜ்யத்திற்கு மேல் வானிலை மூன்று முறை மட்டுமே ஏற்பட்டுள்ளது. அதுவும் 2007 ஆம் ஆண்டு அதிகமாக 7.7 டிகிரி ஆக பதிவாகியிருந்தது.


ரொறொன்ரோவில் கடும் பனிப்பொழிவால் வாகன விபத்து அதிகரிப்பு.
[Thursday 2019-01-03 21:00]

ரொறொன்ரோவில் பனிப்பொழிவால் வாகன விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக ஒன்றாரியோ மாகாண பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ரொறொன்ரோவின் கிறேட்டர் பகுதியில் நேற்று (புதன்கிழமை) மாத்திரம் 50இற்கும் அதிகமான விபத்துக்கள் பதிவாகியுள்ளன. அண்மைய கருத்துக்கணிப்பில் நிமிடத்திற்கு ஒன்று என்ற அடிப்படையில் வாகனங்கள் மோதிக்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.


கனடாவின் லண்டன் பகுதியில் உறைபனி எச்சரிக்கை!
[Thursday 2019-01-03 21:00]

கனடாவின் லண்டன் பகுதியில் எதிர்வரும் சில தினங்களுக்கு கடும் குளிருடனான காலநிலை நிலவக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுற்றுசூழல் கனடா அமைப்பினால் இன்று(வியாழக்கிமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தண்டவாளத்தில் சிக்கிய லொறியை ரெயில் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு!
[Thursday 2019-01-03 21:00]

கனடாவில் டேங்கர் லொறியொன்று ரயில் தண்டவாளத்தில் அங்குமிங்கும் செல்ல முடியாதவாறு சிக்கியிருந்த நிலையில் அதில் ரயில் ஒன்று மோதியுள்ளது. எட்மொன்டன் கிழக்கு பகுதியில் உள்ள ரயில்வே கடவை பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி மதியம் 1.30 மணிக்கு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் டேங்கர் லொறியின் சாரதியே உயிரிழந்தார்.


வோகன் பகுதியில் மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ள வாகனம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகள் ஆரம்பம்!
[Thursday 2019-01-03 08:00]

வோகன் பகுதியில் ஒருவரை மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ள வாகனம் ஒன்று தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். நேற்று காலையில் ஜேன் தெரு மற்றும் பென்சில்வேனியா அவென்யூ பகுதியில் உள்ள வீதியோர நடைபாதையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஜேன் தெருவில் தெற்கு நோக்கி பயணித்த சிறிங SUV ரக வாகனம் ஒன்றினால், குறித்த அந்த நபர் மோது்ணடதாக, சம்பவத்தை நேரில் பார்த்தோர் மூலம் அறிநது கொண்டதாக விசாரணைகளை முன்னெடுத்துவரும் பொலிஸார் தெரிவித்து்ளளனர்.


ரஷ்யாவில் எரிவாயு வெடித்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்வு.
[Thursday 2019-01-03 08:00]

ரஷியா நாட்டின் செல்யாபின்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள மாக்னிடோகோர்ஸ்க் நகரில் உள்ள பத்து மாடிகளை கொண்ட குடியிருப்பின் ஒரு வீட்டில் கடந்த திங்கட்கிழமை கியாஸ் கசிவு ஏற்பட்டதால் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் 48 வீடுகள் இடிந்து விழுந்தன. இந்த கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது. அப்பகுதியில் நிலவிவரும் கடுமையான பனிமூட்டம் மற்றும் குளிருக்கு இடையில் இருநாட்களாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.


பிரான்சில் ராட்டினத்தில் சிக்கிய 8 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு.
[Thursday 2019-01-03 08:00]

பிரான்ஸ் நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள பிரித்தானியா பிராந்தியத்தின் தலைநகர் ரென்னஸ். இங்கு நேற்று முன்தினம் இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி ராட்சத ராட்டினங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதிக உயரத்தில் இருந்து வேகமாக கீழே இறங்கும் ஒரு ராட்டினத்தில் சிறுவர்கள் உள்பட 8 பேர் ஏறி அமர்ந்தனர். கீழே இருந்து புறப்பட்டு 170 அடி உயரத்துக்கு சென்ற அந்த ராட்டினம் திடீர் எந்திர கோளாறு ஏற்பட்டு, மேல் பகுதியிலேயே நின்றுவிட்டது.


அமெரிக்கா - 'தவறுதலாக அழுத்தியதில் குண்டு பாய்ந்து நண்பன் பலி'.
[Thursday 2019-01-03 08:00]

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தின் தலைநகர் அட்லாண்டாவின் புறநகர் பகுதியான லாரன்சஸ்வில்லேவை சேர்ந்த சிறுவன் டெவின் ஹோட்ஜ் (வயது 15). இவனை பார்க்க நண்பர்கள் 3 பேர் நேற்று முன்தினம் அவனுடைய வீட்டுக்கு வந்தனர். அப்போது சிறுவன் டெவின் ஹோட்ஜ், தங்கள் வீட்டில் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து வந்து நண்பர்களிடம் காட்டினான். அப்போது டெவின் ஹோட்ஜ் தவறுதலாக துப்பாக்கியை அழுத்திவிட்டான்.


அவுஸ்ரேலியாவில் உள்ள இரண்டு முக்கிய அகதி முகாம்களை மூடுவதாக அறிவித்தது அந்நாட்டு அரசு.
[Wednesday 2019-01-02 22:00]

இரண்டு அதிமுக்கிய உயர்பாதுகாப்பு கொண்ட அகதி முகாம்களை மூடவுள்ளதாக அவுஸ்ரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. அண்மைக்காலமாக அவுஸ்ரேலியாவிற்கு வருகை தரும் அகதிகளின் எண்ணிக்கை பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளமையினைத் தொடர்ந்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மெல்பேர்னின் Maribyrnong குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இறுதி அகதி வெளியேறுவதையடுத்து குறித்த முகாம் இந்த வாரம் மூடப்படவுள்ளது.


'பிரேஸிலின் புதிய ஜனாதிபதி உறுதி' - பிரிவினை இல்லாத சமூகத்தை உருவாக்குவேன்.
[Wednesday 2019-01-02 22:00]

நாட்டில் பிரிவினை இல்லாத சமூகத்தை உருவாக்கவுள்ளதாக பிரேஸிலின் புதிய ஜனாதிபதி ஜெய்ர் பொல்சொனாரோ (Jair Bolsonaro) தெரிவித்துள்ளார். கடந்த ஒக்டோபர் 28 ஆம் திகதி நடைபெற்ற இரண்டாம் கட்ட ஜனாதிபதித் தேர்தலில், ஜெய்ர் பொல்சொனாரோ 55 வீத வாக்குகளால் வெற்றிபெற்றார். இந்தநிலையில் புதிய ஜனாதிபதியாக 63 வயதான ஜெய்ர் பொல்சொனாரோ நேற்று(செவ்வாய்கிழமை) பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


பிலிப்பைன்ஸ் வெள்ளப்பெருக்கு
[Wednesday 2019-01-02 22:00]

பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது. இந்த தகவலை அந்நாட்டு பேரிடர் மேலாண்மை துறையின் ஊடக பேச்சாளர் இன்று (புதன்கிழமை) உறுதிப்படுத்தியுள்ளனர். அந்த நாட்டின் மத்திய பகுதியில் உள்ள பிகோல் மற்றும் கிழக்கு விசயாஸ் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடைவிடாத கனமழை பெய்து வருகின்றது. இதில் அங்குள்ள 300க்கும் மேற்பட்ட ஊர்கள் பலத்த சேதமடைந்தன. கனமழையால் நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது. ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.


புதுவருடத்தில் கனடாவில் பிறந்த வெளிநாட்டுக் குழந்தைக்கு கிடைத்த அதிஷ்டம்!
[Wednesday 2019-01-02 22:00]

கனடாவில் குடியுரிமைக்காக காத்திருக்கும் அயர்லாந்து தம்பதிகளுக்கு பிறந்த குழந்தை, கனடா குடியுரிமையை பெற்றுக்கொண்டுள்ளது. 2019ஆம் ஆண்டு நள்ளிரவு 12.01இற்கு பிறந்த அவர்களுடைய குழந்தை இந்த அதிஷ்டத்தை பெற்றுக்கொண்டுள்ளது.கல்கரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய், 16 மணித்தியாலங்களின் பின்னர் புத்தாண்டில் இக்குழந்தையை பிரசவித்துள்ளார். இக்குழந்தைக்கு ஆரியா டொக்வெல் என பெயரிட்டுள்ளனர்.


2019 இல் ஒன்ராறியோவில் கடுமையான புதிய நடைமுறைகள்!
[Wednesday 2019-01-02 22:00]

விதிமுறைகளுக்கு மீறி வாகனத்தைச் செலுத்திச் செல்வோருக்கு எதிரான கடுமையான புதிய நடைமுறைகள் ரொறன்ரோவிலும் புதுவருடம் முதல் நடப்பிற்கு வருகிறது. ஒன்ராறியோ மாகாண அரசு விதிமுறைகளுக்கு முரணாக வாகனத்தைச் செலுத்திச் செல்வோருக்கு எதிரான கடுமையான புதிய நடைமுறைகளை நேரில் இருந்து நடப்புக்கு கொண்டுவந்துள்ளது. இந்த நிலையிலேயே எந்த விதமான தாமதமும் இன்றி ரொறன்ரோவிலும் குறித்த விதிமுறைகள் இன்றிலிருந்து நடைமுறைக்கு வருவதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளது.


கெவின் விக்கர்ஸ் நியூ பிரன்சுவிக் லிபரல் தலைவராகின்றார்.
[Wednesday 2019-01-02 22:00]

அயர்லாந்துக்கான கனடாவின் தூதராக உள்ள கெவின் விக்கர்ஸ், நியூ பிரன்சுவிக் மாகாணத்தின் லிபரல் தலைவர் பதவியை விரைவில் ஏற்றுக்கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னாள் முதல்வர் பிரையன் கல்லன்ட் திட்டமிட்டதைவிட முன்னரே லிபரல் தலைவர் பதவியில் இருந்து விலகுவார் என அறிவித்துள்ளார்.


டன்ஃபோர்ட்டில் பெண்ணொருவர் கைது! - 'இரு ஆண்கள் மீது கத்திக்குத்து'
[Wednesday 2019-01-02 22:00]

டன்ஃபோர்ட் கிழக்கு முடிவு பகுதியில் இரு ஆண்கள் மீது கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரதான வீதி மற்றும் டன்ஃபோர்ட் அவென்யூ பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றதை அடுத்து அங்கு அவரச மருத்துவ பிரிவினர் அழைக்கப்பட்டனர்.


'மான்செஸ்டர் கத்திக்குத்து சம்பவம் பயங்கரவாத தொடர்புடையது' - இங்கிலாந்து போலீசார்
[Wednesday 2019-01-02 09:00]

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ரெயில்வே நிலையம் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் 3 பேரை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தி உள்ளார். இந்த சம்பவத்தில் ஆண், பெண் மற்றும் காவல்துறை அதிகாரி ஒருவர் என 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கத்திக்குத்து தாக்குதல் நடத்திய மர்ம நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


"பஸ் ஓட்ட கூட தகுதி இல்லாதவர்கள் விமானிகளா?" - பாகிஸ்தான் நீதிபதி கண்டனம்.
[Wednesday 2019-01-02 09:00]

பாகிஸ்தானின் பொதுத்துறை நிறுவனமான பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் விமானிகள் மற்றும் ஊழியர்களில் பலர் பள்ளி படிப்பை கூட முடிக்காதவர்கள் என்றும், அவர்கள் போலி சான்றிதழ்களை கொடுத்து பணியில் சேர்ந்ததாகவும் சிவில் விமான போக்குவரத்து கழகம் குற்றம் சாட்டியது. மேலும் அவர்களின் கல்வி சான்றிதழ்களை சரி பார்க்க கல்லூரி மற்றும் பல்கலைக்கழங்கள் ஒத்துழைப்பு அளிப்பது இல்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.


பிலிப்பைன்சில் வெள்ளம் - பலியானோர் எண்ணிக்கை 75 ஆக அதிகரிப்பு.
[Wednesday 2019-01-02 09:00]

பிலிப்பைன்சில் ஆண்டுதோறும் 20 புயல்கள் உருவாகின்றன. இதனால் பெய்துவரும் கனமழையில் ஏற்படும் வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர். இந்நிலையில், அந்த நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பிகோல் மற்றும் கிழக்கு விசயாஸ் பிராந்தியங்களில் கடந்த சில நாட்களாக இடைவிடாத கனமழை கொட்டித் தீர்த்தது. இதில் அங்குள்ள 300-க்கும் மேற்பட்ட பகுதிகள் பலத்த சேதமடைந்து உள்ளன. கனமழையால் நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்து வெள்ளம் கரை புரண்டோடுகிறது. ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.


டிரம்புக்கு புதின் கடிதம் - "அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்"
[Tuesday 2019-01-01 22:00]

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையீடு, உக்ரைன் விவகாரம் உள்ளிட்டவற்றால் அமெரிக்கா-ரஷியா இடையே சமீபகாலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதன் காரணமாக அர்ஜென்டினாவில் அண்மையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் புதினுடனான சந்திப்பை டிரம்ப் தவிர்த்துவிட்டார். இந்த நிலையில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடிதம் எழுதி உள்ளார்.


"உலகத்திலேயே அதிக அளவில் ஊழல்கள் இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் தான்" - மந்திரி அதிர்ச்சி தகவல்.
[Tuesday 2019-01-01 22:00]

இலங்கை கிரிக்கெட் வாரியம் சமீபகாலமாகவே சூதாட்டத்தில் சிக்கி தவித்து வருகிறது. 2017

Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா