Untitled Document
April 29, 2024 [GMT]
அதிபர் டிரம்ப் எச்சரிக்கை - 'அமெரிக்காவில் அவசரநிலை கொண்டுவருவேன்'
[Saturday 2019-01-05 22:00]

அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலின்றி அமெரிக்கா-மெக்ஸிகோ இடையே எல்லைச்சுவர் கட்டுவதற்காக நாட்டில் அவசரநிலையை பிரகடனம் செய்வேன் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளது அந்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தனது கனவுத் திட்டமான எல்லைச்சுவர் கட்டுவதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வரும் ஜனநாயக கட்சியினருடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததையடுத்து டிரம்ப் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார். தனது எல்லைச்சுவர் திட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால், கடந்த வருடத்தின் இறுதியிலிருந்து நடைமுறையிலுள்ள பகுதியளவு அரசாங்க முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவரும் மசோதாவிற்கு இறுதி ஒப்புதல் வழங்குவதற்கு டிரம்ப் மறுப்பு தெரிவித்து வருகிறார்.


சீனாவில் சனத்தொகை குறைய
[Saturday 2019-01-05 09:00]

சர்வதேச ரீதியாக மிக அதிகமான சனத்தொகையை கொண்ட நாடாக சீனா இருந்து வருவதுடன், கடந்த பல வருடங்களாக ஏறக்குறைய 140 கோடி மக்கள் தொகையுடனேயே தொடர்ந்து நீடிக்கின்றது. இந்த நீடிப்புக்கு


[Saturday 2019-01-05 09:00]

தெற்கு தாய்லாந்தை தாக்கிய 'பபுக்' என்ற சூறாவளி காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த புயல் இன்று மதியம் கரையை கடந்துள்ளதாக அந்த நாட்டு வானிலை அவதான மையம் தெரிவித்துள்ளது. தெற்கு தாய்லாந்தில் பலத்த பாதிப்புகளை ஏற்படுத்தும் எதிர்பார்கப்பட்ட பபுக் என்ற சூறாவளி தென் கடற்பகுதியை ஊடறுத்து கரையை கடந்துள்ளது. எவ்வாறாயினும் 'பபுக்' என்ற சூறாவளியினால் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தாய்லாந்து வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


ஆப்பிள் போனை பயன்படுத்திய ஊழியர்களை தண்டித்த 'ஹ்வாவே' நிறுவனம்.
[Saturday 2019-01-05 09:00]

தனது போட்டி நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் மொபைல்களை பயன்படுத்தியதால் தனது இரண்டு ஊழியர்களை சீன தொலை தொடர்பு நிறுவனமான ஹ்வாவே தண்டித்துள்ளது. போட்டி நிறுவன போனை பயன்படுத்தி புத்தாண்டு வாழ்த்து அனுப்பிய ஊழியர்களை தண்டித்த சீன நிறுவனம். ஊழியர்கள் இருவரும் ஹ்வாவே நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இருந்து புத்தாண்டு வாழ்த்துகளை ட்விட் செய்துள்ளனர். ஐபோனில் இருந்து வெளியிடப்பட்டதை காட்டிக்கொடுக்கும் விதமாக அந்த வாழ்த்துச் செய்தியுடன் 'ஐ போனில் இருந்து இந்த ட்விட் வெளியிடப்பட்டது' என்று ஒரு தகவல் வந்துள்ளது.


"மூன்று வாரமாக மூடப்பட்டுள்ள அமெரிக்க அரசாங்கம்!" - டிரம்ப் என்ன செய்கிறார்?
[Saturday 2019-01-05 09:00]

'கவர்ன்மென்ட் ஷட் டவுன்' என்று அழைக்கப்படும் அமெரிக்க அரசு செயல்பாடுகள் முடக்கம் மூன்றாவது வாரமாகத் தொடர்ந்து வரும் சூழ்நிலையில், இதனை பல ஆண்டுகள் தொடர கூடத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி உள்ளார். அமெரிக்காவில் தொடர்ந்துவரும் அரசு செயல்பாடு முடக்கம், அந்நாட்டில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. மெக்சிகோ எல்லையில் சுவர்கட்டும் அதிபர் டிரம்பின் திட்டத்துக்கு நிதி ஒதுக்க காங்கிரஸ் மறுத்து வரும் நிலையில் ஏற்பட்ட சிக்கலால், பல்வேறு அரசுத் துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான நிதி மசோதா நிறைவேற்றப்படாமல் அரசுப் பணிகள் முடக்கம் நடந்துவருகிறது.


கனேடியர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் தகவல்களை வெளியிடுவதில் மௌனம் காக்கும் சீனா!
[Saturday 2019-01-05 09:00]

சீனாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, கனேடியர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் தகவல்களை வெளியிடுவதில் சீனா தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றது. இதற்கிடையில் இந்த செயற்பாட்டுக்கு வலுசேர்க்கும் வகையில், கனேடியர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் கலந்துரையாடுவது தங்களுக்கு வசதியாக இல்லை என சீனா கூறியுள்ளது.குறிப்பாக தம்மால் தடுத்து வைக்கப்பட்டுள்ள கனேடியர்கள் மீது எவ்வாறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்பதனை தெரிவிப்பதை தாம் விரும்பவில்லை என சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் லூ காங் தெரிவித்துள்ளார்.


ஒன்ராரியோ, ஸ்கொம்பேர்க் பகுதியில் நடந்த விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழப்பு!
[Friday 2019-01-04 21:00]

ஒன்ராரியோ ஸ்கொம்பேர்க் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவரும் பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நெடுஞ்சாலை 9 இன் மேற்குப்பகுதியில் இருந்து வந்த பிக் அப் ட்ரக் மற்றும் கிழக்கு பகுதியூடாக வந்த மோட்டார் சைக்கிளும் நேற்று (வியாழக்கிழமை) விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


வன்கூவரில் உடைகள் சேகரிக்கும் தொட்டிகளை அகற்ற தொண்டு நிறுவனம் முடிவு!
[Friday 2019-01-04 21:00]

வன்கூவரில் உடைகள் சேகரிக்கும் தொட்டியில் ஒருவர் வீழ்ந்து இறந்ததை அடுத்து அவற்றினை மூடவுள்ளதாக பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. வட வான்கூவர் தீவு, ஃப்ரேசர் பள்ளத்தாக்கு, சன்ஷைன் கோஸ்ட், பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் வான்கூவர் பகுதிகளில் இதுவரை 146 தொட்டிகள் நிறுவப்பட்டுள்ளன.


[Friday 2019-01-04 21:00]

தெற்கு தாய்லாந்து பகுதியில் புயல் சீற்றம் ஏற்பட்டுள்ளதால் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் நகோன் சி தாமராத் மாகாணத்தில் 80 ஆயிரம் மக்களை வெளியேற்ற அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாய்லாந்தின் தெற்கு கடல்பகுதியில் புயல் நிலைகொண்டுள்ளது. பபுக் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், 75 கி.மீ முதல் 95 கி.மீ. வேகத்துடன் இன்று மதியம் கரையைக் கடக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


"எங்களுக்கு பாடம் எடுக்க நீங்கள் யார்?" - அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!
[Friday 2019-01-04 21:00]

ஏவுகணை சோதனைகள் மற்றும் உற்பத்தி தொடர்பாக அமெரிக்கா எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம் என்று ஈரான் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமத் ஜாவத் சாரிப் கூறும்போது,


அமெரிக்காவுக்கு போட்டியாக சீனா தயாரித்திருக்கும் ராட்சத குண்டு.
[Friday 2019-01-04 21:00]

அமெரிக்கா உருவாக்கிய


சீனாவின் பிரபல தொடர் கொலையாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்.
[Friday 2019-01-04 21:00]

சீனாவில் பிரபல சீரியல் கில்லராக இருந்த காவோ சென்னிங்கோங் என்பவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து சீன ஊடகங்கள், சீனாவில் 1988-ம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரை சீனாவின் பல்வேறு இடங்களில் குழந்தைகள் மற்றும் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததற்காக காவோ நீண்ட வருடங்களாக போலீஸாரால் தேடப்பட்டு வந்தார்.


மெக்சிகோவில் மேயர் பதவியேற்ற நபர் சில மணி நேரங்களில் சுட்டு கொல்லப்பட்டார்.
[Friday 2019-01-04 09:00]

மெக்சிகோவின் ஆக்சகா மாநிலம், டிலாக்சியாகோ நகர மேயராக அலெஜாண்டரோ அபார்சியோ என்பவர் கடந்த ஒன்றாம் தேதி பதவியேற்றார். அவர், பதவியேற்ற சில மணி நேரங்களில், கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக, அங்குள்ள அரங்கத்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.


பாகிஸ்தான் எதிரிகளுக்கு அடைக்கலம் தருகிறது - டிரம்ப் பேச்சு.
[Friday 2019-01-04 09:00]

உலகளாவிய பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவின் கூட்டாளியாக பாகிஸ்தான் உள்ளது. இதற்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆண்டுதோறும் நிதி உதவி அளித்து வந்தது. ஆனால் அந்த நிதியை பாகிஸ்தான் பெற்றுக்கொண்டு, தனது சொந்த நாட்டில் உள்ள பயங்கரவாத அமைப்புகளை பாரபட்சமின்றி ஒடுக்கத்தவறி விட்டது என்பது அமெரிக்காவின் கருத்தாக உள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானை வெளிப்படையாக கண்டித்த ஜனாதிபதி டிரம்ப், பாகிஸ்தானுக்கு அளித்து வந்த கோடி கணக்கிலான நிதி உதவியை நிறுத்தினார். கடந்த நவம்பர் மாதம் ஆப்கானிஸ்தானுக்கான புதிய கொள்கையை வெளியிட்ட டிரம்ப், பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் பாகிஸ்தான் இரட்டை வேடம் போடுவதாகவும், அந்நாட்டுக்கு வழங்கப்பட்டு வரும் 1.3 பில்லியன் டாலர் (சுமார் ரூ.9 ஆயிரத்து 100 கோடி) நிதி நிறுத்தப்படுவதாக அறிவித்தார்.


சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - மக்கள் வீதிகளில் தஞ்சம்.
[Friday 2019-01-04 09:00]

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.3 புள்ளிகளாக பதிவானதாகவும், பூமிக்கு அடியில் 15 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் சீன நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்தது. சுமார் 10 வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகள், வணிக வளாகங்களில் இருந்து அலறி அடித்துக்கொண்டு வெளியேறினர்.


என்ன நடக்கிறது அமெரிக்காவில்! - "முரண்டு பிடிக்கும் டிரம்ப், பரிதவிக்கும் மக்கள்".
[Thursday 2019-01-03 21:00]

அமெரிக்காவில் தொடர்ந்துவரும் அரசு செயல்பாடு முடக்கம், அந்நாட்டில் மோசமான விளைவுகளைஏற்படுத்தி வருகிறது. மெக்ஸிகோ எல்லையில் சுவர்கட்டும் அதிபர் டிரம்பின் திட்டத்துக்கு நிதி ஒதுக்க காங்கிரஸ் மறுத்து வரும் நிலையில் ஏற்பட்ட சிக்கலால், பல்வேறு அரசுத் துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான நிதி மசோதா நிறைவேற்றப்படாமல் அரசுப் பணிகள் முடக்கம் நடந்துவருகிறது.


சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் முக்கிய திருப்பம்.
[Thursday 2019-01-03 21:00]

ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சௌதி தலைநகரான ரியாத்தில் 11 பேர் மீது வழக்கு விசாரணை துவங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. பிரதிவாதிகள் ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என அரசு வழக்குரைஞர் வாதாடியுள்ளார். பிரபல பத்திரிகையாளரான கஷோக்ஜி சௌதி அரசு மீது விமர்சனங்களை வைத்து வந்தார். கடந்த வருடம் அக்டோபர் 2-ம் தேதி துருக்கி நாட்டின் இஸ்தான்புல்லில் உள்ள சௌதி தூதரகத்தில் நுழைந்தபின்னர் உயிருடன் வெளியே வரவில்லை. சௌதிக்கு கஷோக்ஜியை திருப்பி வர வைப்பதற்காக அனுப்பப்பட்ட ஊழியர்கள் மேற்கொண்ட ஒரு முரட்டுத்தனமான நடவடிக்கையில் கஷோக்ஜி கொல்லப்பட்டதாக அரசு வழக்குரைஞர்கள் தெரிவிக்கின்றனர். இஸ்தான்புல்லுக்குச் சென்று கொலை செய்த 15 சந்தேக ஊழியர்கள் உள்பட கஷோக்ஜி கொலை வழக்கு விசாரணைக்காக 18 சந்தேக நபர்களை ஒப்படைக்குமாறு துருக்கி விடுத்திருந்த கோரிக்கையை சௌதி அரேபியா நிராகரித்துள்ளது.


'க்ரூட் சாலட்' பாலத்தின் மூன்று வருட சாலை புதுப்பித்தல் - ரிவர் வொல்லி வீதி மூடப்படும்.
[Thursday 2019-01-03 21:00]

க்ரூட் சாலட் பாலத்தின் மூன்று வருட சாலை புதுப்பித்தல் திட்டத்தின் ஒரு பகுதியாக அதன் கீழ் உள்ள ரிவர் வொல்லி வீதி இன்று (வியாழக்கிழமை) முதல் மூடப்படுவதாக நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாலம் கீழ் உள்ள பகிர்வு-பயன்பாட்டு பாதை மற்றும் வடமேற்கு பகுதியில் இருந்து பாலத்தை நோக்கி செல்லும் பாதைகளே மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 10 வருடங்களில் எட்மண்டனில் 3 ஆவது முறையாக உயர் வெப்பநிலை பதிவு!
[Thursday 2019-01-03 21:00]

எட்மண்டனில் கடந்த மாதங்களாக குளிர்காலநிலை நிலவிவந்த நிலையில் இந்த ஆண்டு அதிக வெப்பநிலை கொண்ட நாளாக ஜனவரி 2 ஆம் திகதி பதிவாகியுள்ளது. கடந்த 10 ஆண்டில் எட்மண்டனில் பூஜ்யத்திற்கு மேல் வானிலை மூன்று முறை மட்டுமே ஏற்பட்டுள்ளது. அதுவும் 2007 ஆம் ஆண்டு அதிகமாக 7.7 டிகிரி ஆக பதிவாகியிருந்தது.


ரொறொன்ரோவில் கடும் பனிப்பொழிவால் வாகன விபத்து அதிகரிப்பு.
[Thursday 2019-01-03 21:00]

ரொறொன்ரோவில் பனிப்பொழிவால் வாகன விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக ஒன்றாரியோ மாகாண பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ரொறொன்ரோவின் கிறேட்டர் பகுதியில் நேற்று (புதன்கிழமை) மாத்திரம் 50இற்கும் அதிகமான விபத்துக்கள் பதிவாகியுள்ளன. அண்மைய கருத்துக்கணிப்பில் நிமிடத்திற்கு ஒன்று என்ற அடிப்படையில் வாகனங்கள் மோதிக்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.


கனடாவின் லண்டன் பகுதியில் உறைபனி எச்சரிக்கை!
[Thursday 2019-01-03 21:00]

கனடாவின் லண்டன் பகுதியில் எதிர்வரும் சில தினங்களுக்கு கடும் குளிருடனான காலநிலை நிலவக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுற்றுசூழல் கனடா அமைப்பினால் இன்று(வியாழக்கிமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தண்டவாளத்தில் சிக்கிய லொறியை ரெயில் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு!
[Thursday 2019-01-03 21:00]

கனடாவில் டேங்கர் லொறியொன்று ரயில் தண்டவாளத்தில் அங்குமிங்கும் செல்ல முடியாதவாறு சிக்கியிருந்த நிலையில் அதில் ரயில் ஒன்று மோதியுள்ளது. எட்மொன்டன் கிழக்கு பகுதியில் உள்ள ரயில்வே கடவை பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி மதியம் 1.30 மணிக்கு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் டேங்கர் லொறியின் சாரதியே உயிரிழந்தார்.


வோகன் பகுதியில் மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ள வாகனம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகள் ஆரம்பம்!
[Thursday 2019-01-03 08:00]

வோகன் பகுதியில் ஒருவரை மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ள வாகனம் ஒன்று தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். நேற்று காலையில் ஜேன் தெரு மற்றும் பென்சில்வேனியா அவென்யூ பகுதியில் உள்ள வீதியோர நடைபாதையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஜேன் தெருவில் தெற்கு நோக்கி பயணித்த சிறிங SUV ரக வாகனம் ஒன்றினால், குறித்த அந்த நபர் மோது்ணடதாக, சம்பவத்தை நேரில் பார்த்தோர் மூலம் அறிநது கொண்டதாக விசாரணைகளை முன்னெடுத்துவரும் பொலிஸார் தெரிவித்து்ளளனர்.


ரஷ்யாவில் எரிவாயு வெடித்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்வு.
[Thursday 2019-01-03 08:00]

ரஷியா நாட்டின் செல்யாபின்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள மாக்னிடோகோர்ஸ்க் நகரில் உள்ள பத்து மாடிகளை கொண்ட குடியிருப்பின் ஒரு வீட்டில் கடந்த திங்கட்கிழமை கியாஸ் கசிவு ஏற்பட்டதால் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் 48 வீடுகள் இடிந்து விழுந்தன. இந்த கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது. அப்பகுதியில் நிலவிவரும் கடுமையான பனிமூட்டம் மற்றும் குளிருக்கு இடையில் இருநாட்களாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.


பிரான்சில் ராட்டினத்தில் சிக்கிய 8 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு.
[Thursday 2019-01-03 08:00]

பிரான்ஸ் நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள பிரித்தானியா பிராந்தியத்தின் தலைநகர் ரென்னஸ். இங்கு நேற்று முன்தினம் இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி ராட்சத ராட்டினங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதிக உயரத்தில் இருந்து வேகமாக கீழே இறங்கும் ஒரு ராட்டினத்தில் சிறுவர்கள் உள்பட 8 பேர் ஏறி அமர்ந்தனர். கீழே இருந்து புறப்பட்டு 170 அடி உயரத்துக்கு சென்ற அந்த ராட்டினம் திடீர் எந்திர கோளாறு ஏற்பட்டு, மேல் பகுதியிலேயே நின்றுவிட்டது.


அமெரிக்கா - 'தவறுதலாக அழுத்தியதில் குண்டு பாய்ந்து நண்பன் பலி'.
[Thursday 2019-01-03 08:00]

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தின் தலைநகர் அட்லாண்டாவின் புறநகர் பகுதியான லாரன்சஸ்வில்லேவை சேர்ந்த சிறுவன் டெவின் ஹோட்ஜ் (வயது 15). இவனை பார்க்க நண்பர்கள் 3 பேர் நேற்று முன்தினம் அவனுடைய வீட்டுக்கு வந்தனர். அப்போது சிறுவன் டெவின் ஹோட்ஜ், தங்கள் வீட்டில் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து வந்து நண்பர்களிடம் காட்டினான். அப்போது டெவின் ஹோட்ஜ் தவறுதலாக துப்பாக்கியை அழுத்திவிட்டான்.


அவுஸ்ரேலியாவில் உள்ள இரண்டு முக்கிய அகதி முகாம்களை மூடுவதாக அறிவித்தது அந்நாட்டு அரசு.
[Wednesday 2019-01-02 22:00]

இரண்டு அதிமுக்கிய உயர்பாதுகாப்பு கொண்ட அகதி முகாம்களை மூடவுள்ளதாக அவுஸ்ரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. அண்மைக்காலமாக அவுஸ்ரேலியாவிற்கு வருகை தரும் அகதிகளின் எண்ணிக்கை பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளமையினைத் தொடர்ந்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மெல்பேர்னின் Maribyrnong குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இறுதி அகதி வெளியேறுவதையடுத்து குறித்த முகாம் இந்த வாரம் மூடப்படவுள்ளது.


'பிரேஸிலின் புதிய ஜனாதிபதி உறுதி' - பிரிவினை இல்லாத சமூகத்தை உருவாக்குவேன்.
[Wednesday 2019-01-02 22:00]

நாட்டில் பிரிவினை இல்லாத சமூகத்தை உருவாக்கவுள்ளதாக பிரேஸிலின் புதிய ஜனாதிபதி ஜெய்ர் பொல்சொனாரோ (Jair Bolsonaro) தெரிவித்துள்ளார். கடந்த ஒக்டோபர் 28 ஆம் திகதி நடைபெற்ற இரண்டாம் கட்ட ஜனாதிபதித் தேர்தலில், ஜெய்ர் பொல்சொனாரோ 55 வீத வாக்குகளால் வெற்றிபெற்றார். இந்தநிலையில் புதிய ஜனாதிபதியாக 63 வயதான ஜெய்ர் பொல்சொனாரோ நேற்று(செவ்வாய்கிழமை) பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா