|
|
குண்டுவெடித்த தேவாலயத்தில் ஜனாதிபதி!
[Tuesday 2019-04-23 18:00]
|
குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான நீர்கொழும்பு - கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்தின் நிலைமைகளை நேரில் கண்டறிவதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று முற்பகல், அங்கு சென்றிருந்தார். அங்கு, அருட்தந்தை ஸ்ரீலால் பொன்சேகா அடிகளாரைச் சந்தித்த ஜனாதிபதி, பிரதேசத்தின் கிறிஸ்தவ மக்களுக்கு, தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார்.
|
|
|
ஊர்காவற்றுறையில் நீர்நிலையில் இருந்து 2 சிறுமிகளின் சடலங்கள் மீட்பு!
[Sunday 2024-06-02 05:00]
|
யாழ்ப்பாணம்- ஊர்காவற்துறை, சின்னமடு பகுதியில் வீதிக்கு அருகேயுள்ள சிறிய நீர்நிலை ஒன்றில் இருந்து இரண்டு சிறுமிகளின் சடலங்கள் நேற்று இரவு 8 மணியளவில் மீட்கப்பட்டுள்ளன.
11 வயதுடைய நிரோசன் விதுசா, 5 வயதுடைய நிரஞ்சன் அனுஷ்கா என்ற இரண்டு சிறுமிகளுமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
|
|
|
குருநகர் சேமக்காலையில் பெண் பெற்றோல் ஊற்றி எரித்துக் கொலை! - பட்டப்பகலில் சம்பவம்.
[Sunday 2024-06-02 05:00]
|
யாழ்ப்பாணத்தில் குடும்பப் பெண் ஒருவரை ஆண் ஒருவர் சவக்காலைக்கு அழைத்து வந்து தலையில் பெற்றோல் ஊற்றி தீ மூட்டிப் படுகொலை செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
|
|
|
நான் தமிழ் பொது வேட்பாளருக்கு மாறானவன்! - மார் தட்டுகிறார் சிவிகே.
[Sunday 2024-06-02 05:00]
|
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் யார் என்ற தெரிவிலேயே இந்த விடயம் முடங்கும். என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்தார்.
|
|
|
குழந்தை வெளிநாட்டில் பிறந்தாலும் கனேடிய குடியுரிமை!- வருகிறது புதுச்சட்டம்.
[Sunday 2024-06-02 05:00]
|
கனடாவிற்கு வெளியே பிறந்த கனேடியர்களின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படும் வகையில், அனுமதிக்கும் சட்டம் மீண்டும் நடைமுறைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
|
|
ஐதேகவின் யோசனைக்கு விக்கி ஆதரவு! - ஏனைய தமிழ் தேசிய கட்சிகள் எதிர்ப்பு.
[Sunday 2024-06-02 05:00]
|
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலைப் பிற்போடுவதற்கு மேற்கொள்ளப்படும் சகல விதமான முயற்சிகளையும் தாம் கடுமையாக எதிர்ப்பதாக தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், வாக்களிப்பதற்கான பொதுமக்களின் உரிமைக்கு மதிப்பளித்து, தேர்தல்களை உரிய காலப்பகுதியில் நடத்தவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
|
|
|
ஜெராட் புஸ்பராஜா ஒஸ்மானுக்கும் ஐஎஸ் அமைப்புக்கும் என்ன தொடர்பு?
[Sunday 2024-06-02 05:00]
|
ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடனான தொடர்பு குறித்து இலங்கையில் கைது செய்யப்பட்ட மூவரின் வங்கிக் கணக்குகள் தொடர்பிலும் வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்துவதற்கு பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் நேற்று கோட்டை நீதவான் நீதிமன்றில் அனுமதி பெற்றுள்ளனர்.
|
|
|
பௌத்த மதத்திற்கு முன்னுரிமை - ரணில் உறுதி.
[Sunday 2024-06-02 05:00]
|
பௌத்த மதத்திற்கு அரசியல் அமைப்பின் படி முன்னுரிமை வழங்கப்பட வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
|
|
|
தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு மேலும் மூன்று அமைப்புகள் ஆதரவு!
[Sunday 2024-06-02 05:00]
|
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள முடிவுக்கு மேலும் மூன்று அமைப்புகள் பூரண ஆதரவு வழங்கியுள்ளன.
|
|
|
வடக்கு மாணவர்கள் அதிகளவில் பல்கலைக்கழகத்துக்கு தகுதி!
[Sunday 2024-06-02 05:00]
|
இம்முறை கல்வி பொது தராதர உயர் தர பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் 64.3 வீதமான மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது.
|
|
|
தேர்தல்களை பிற்போடக் கூடாது! -சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தல்.
[Sunday 2024-06-02 05:00]
|
நாட்டின் தேசிய தேர்தல்கள் பிற்போடப்படக்கூடாது எனவும், அவை உரியகாலத்தில் ஜனநாயகமுறைப்படி நடத்தப்படவேண்டியது அவசியம் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
|
|
|
ஆலையடிவேம்பில் வாள்வெட்டுக் குழு அடாவடி! - 7 பேர் படுகாயம்.
[Saturday 2024-06-01 17:00]
|
அம்பாறை - அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் வாச்சிக்குடா பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் 7 பேர் பலத்த காயங்களுடன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
|
|
|
யாழ். பொதுநூலக எரிப்பின் 43 ஆவது ஆண்டு நினைவேந்தல்!
[Saturday 2024-06-01 17:00]
|
தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய நூலகமாக திகழ்ந்த யாழ் பொது நூலக எரிப்பு இடம்பெற்று இன்றுடன் 43ஆவது ஆண்டுகள் கடந்துள்ளதை நினைவு கூரும் நினைவேந்தல் யாழ்.பொது நூலகத்தில் இன்று இடம்பெற்றது.
|
|
|
உடுப்பிட்டியில் கோழிக் கடைக்காரருக்கு வாள்வெட்டு! - அதிகாலையில் சம்பவம்.
[Saturday 2024-06-01 17:00]
|
யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி பகுதியில் இன்று அதிகாலை கொள்ளையர்களால் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட நபரொருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
|
|
|
குஜராத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மத தீவிரவாதிகளே இல்லை!
[Saturday 2024-06-01 17:00]
|
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இலங்கையர்கள் நால்வரும் மததீவிரவாதிகள் இல்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.
|
|
|
ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி பிரசாரத்தை தொடங்கியது முன்னணி!
[Saturday 2024-06-01 17:00]
|
ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் இன்று யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
இன்று மாலை மூன்று மணியளவில் குறித்த துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
|
|
|
செப்டெம்பருக்குள் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்!
[Saturday 2024-06-01 17:00]
|
கடந்த மே மாதம் 15ஆம் திகதி நிறைவடைந்த கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் வெளியிட எதிர்பார்க்கப்படுகிறது.
|
|
|
நயினாதீவுக்கான படகுச் சேவை! - இன்று முதல் புதிய அட்டவணை!
[Saturday 2024-06-01 17:00]
|
நயினாதீவு குறிகட்டுவான் படகுச்சேவை இன்று தொடக்கம் புதிய நேர அட்டவணையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்புடனான நேர அட்டவணையை வேலணை பிரதேச சபை நயினாதீவு உப அலுவலகத்தின் பொறுப்பதிகாரி வெளியிட்டுள்ளார்.
|
|
|
தலைமன்னார் சிறுமி கொலை சந்தேக நபரை ஒட விட்டுவிட்டு தேடுகிறது பொலிஸ்!
[Saturday 2024-06-01 17:00]
|
தலைமன்னார் சிறுமி கொலை தொடர்பாக கைதாகி சிறைச்சாலை அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் சென்ற சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
|
|
|
எரிபொருள் விலை குறைந்தாலும் கட்டணம் குறையாது!
[Saturday 2024-06-01 17:00]
|
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தமது எரிபொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைத்துள்ளது.
|
|
|
தமிழரசு நிர்வாகிகள் தெரிவுக்கு எதிரான கட்டாணை உத்தரவு நீடிப்பு!
[Saturday 2024-06-01 17:00]
|
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகிகள் தெரிவிற்கு எதிராக, திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் ஏற்கனவே விதித்திருந்த கட்டாணை உத்தரவு, மீண்டும் ஜூலை19 ந் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
|
|
|
யாழ். இந்து கல்லூரியில் 56 மாணவர்களுக்கு 3 ஏ! - வேம்படியில் 30 பேருக்கு 3ஏ.
[Saturday 2024-06-01 05:00]
|
நேற்று வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தர தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த 56 மாணவர்கள் 3ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.
|
|
|
எரிபொருள்களின் விலை குறைப்பு!
[Saturday 2024-06-01 05:00]
|
நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
|
|
|
ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்பு -ஒஸ்மான் புஷ்பராஜ் கைது!
[Saturday 2024-06-01 05:00]
|
ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்பு கொண்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் இந்தியாவில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி உதவியதாக நம்பப்படும் முக்கிய சந்தேக நபரான ஒஸ்மான் புஷ்பராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
|
|
|
அரசாங்கத்தை விட்டு வெளியேறுவோம்! - மிரட்டுகிறது மொட்டு.
[Saturday 2024-06-01 05:00]
|
நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தைத் தோற்றுவிக்கவில்லை. தவறான வழியில் ஜனாதிபதி செயற்பட்டால் அரசாங்கத்திலிருந்து விலகுவோம். அவ்வாறான நிலை ஏற்பட்டால் ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தின் ஆதரவு கிடைக்காது. அரசாங்கத்தையும் முன்னெடுத்துச் செல்ல முடியாது என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
|
|
|
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் தமிழ் மாணவர்கள் சாதனை!
[Saturday 2024-06-01 05:00]
|
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை -2023 (2024) பெறுபேறுகளுக்கு அமைய கலைத்துறை, வணிகவியல், உயிரியல் விஞ்ஞானம், பௌதீக விஞ்ஞானம், உயிர் முறைமைகள் தொழிநுட்பம், பொறியியல் தொழிநுட்பம் ஆகிய பிரிவுகளில் அகில இலங்கை ரீதியில் முதல் 10 இடத்தை பெற்ற மாணவர்களின் விபரங்களை பரீட்சை திணைக்களம் வௌியிட்டுள்ளது.
|
|
|
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் நடேசனின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல்!
[Saturday 2024-06-01 04:00]
|
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
|
|
|
வடமராட்சி ஊடக இல்லத்தில் நடேசனின் 20 ஆவது நினைவேந்தல்!
[Saturday 2024-06-01 04:00]
|
மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியாளரும் நாட்டுப் பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 20 ஆவது நினைவேந்தல், நேற்று வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்றது.
|
|
|
சுமந்திரனின் அழைப்பை நிராகரித்தார் விக்கி!
[Saturday 2024-06-01 04:00]
|
ஜனாதிபதித் தேர்தலில் பொதுத் தமிழ் வேட்பாளர் ஒருவரை முன்வைப்பது தொடர்பில் இன்று கலந்துரையாடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் விடுத்த அழைப்பிற்கு சி.வி.விக்னேஸ்வரன் தனது ஆட்சேபனையை தெரிவித்துள்ளார்.
|
|
|
|