Untitled Document
May 4, 2024 [GMT]


பிலிப்பைன்ஸ் நாட்டில் போகிமேன் கோ விளையாட்டிற்கு தடை!
[Thursday 2016-08-25 08:00]

உலகெங்கும் பரவலாகியுள்ள போகிமேன் கோ என்ற இணைய வீடியோ விளையாட்டு பல விபத்துக்களையும் ஏற்படுத்தி வருகிறது. இரவு பகல் பாராமல் உணவு, உறக்கமின்றி பலர் இந்த விளையாட்டிற்கு அடிமையாகிக் கொண்டிருக்கின்றனர். கையில் கைத்தொலைப் பேசியுடன் எல்லா இடங்களிலும் போகிமேன் கோ வேட்டையில் மக்கள் இறங்கியுள்ளனர். இதேவேளை, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், வழிப்பாட்டு தளங்கள், காவல் நிலையங்கள் ஆகிய எல்லா இடங்களில் போகி மேனை தேடி அலைவதால் அவர்கள், பிறருக்குத் தொந்தரவை ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டப்படுகிறது.


அமெரிக்காவில் நோயாளிகளை கொடூரமாக கொன்ற தாதி: 380 ஆண்டுகள் சிறை தண்டனை!
[Saturday 2024-05-04 17:00]

அமெரிக்காவில் மறுவாழ்வு மையங்களில் முதியோர்களுக்கு அளவுக்கு அதிகமாக இன்சூலின் கொடுத்து தாதியொருவர் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் வசித்து வரும் 41 வயதான ஹீதர் பிரஸ்டீ 5க்கும் மேற்பட்ட முதியோர் மறுவாழ்வு மையங்களில் தாதியாக பணியாற்றி வந்துள்ளார்.


பிரித்தானியாவைப்போலவே புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு அனுப்ப மற்றொரு நாடு திட்டம்!
[Saturday 2024-05-04 17:00]

பிரித்தானியாவைப்போலவே புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட ஒரு நாட்டு மக்களை ருவாண்டா போன்றதொரு ஆப்பிரிக்க நாட்டுக்கு அனுப்ப சுவிட்சர்லாந்து திட்டமிட்டுவருகிறது. சுவிட்சர்லாந்தில், புகலிடக்கோரிக்கை நிராகரிக்கபட்ட, எரித்ரியா நாட்டவர்கள் சுமார் 300 பேர் வாழ்ந்துவருகிறார்கள். அவர்களை ருவாண்டா போன்றதொரு ஆப்பிரிக்க நாட்டுக்கு அனுப்ப சுவிட்சர்லாந்து திட்டமிட்டுவருகிறது.


கனடாவில் இரு தமிழர்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
[Saturday 2024-05-04 17:00]

கனடாவில்(Canada) முதியவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு தமிழர்களின் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, சந்தேக நபர்களினால் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என தெரிவித்துள்ள புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களின் படங்களை வெளியிட்டு பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.


சுவிட்சர்லாந்தில் அதிகரித்துள்ள வெளிநாட்டு முதலீடுகள்!
[Saturday 2024-05-04 17:00]

2023 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டு முதலீடுகளில் கூர்மையான அதிகரிப்பு பதிவாகியுள்ளது. ஐரோப்பா முழுவதும் வெளிநாட்டு முதலீட்டு திட்டங்களின் எண்ணிக்கை 4% குறைந்துள்ளது. அதே சமயம் சுவிட்சர்லாந்தில் இது 50% அதிகரித்து 89 திட்டங்களாக உள்ளது என்று ஆலோசனை நிறுவனம் EY தெரிவித்துள்ளது.


14 கோடி மைல் தூரத்தில் இருந்து லேசர் சிக்னல்: நாசா சொன்ன மகிழ்ச்சியான தகவல்!
[Saturday 2024-05-04 07:00]

நாசா, விண்வெளியில் 14 கோடி மைல் தொலைவில் இருந்து லேசர் சிக்னலை வெற்றிகரமாக பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இது டி.எஸ்.ஓ.சி (Deep Space Optical Communication) என்ற புதிய தொழில்நுட்பத்தின் சாதனை ஆகும். சைக் விண்கலம்) 2023 ஆம் ஆண்டு அக்டோபரில், சைக் 16 என்ற சிறுகோளை ஆய்வு செய்ய நாசா சைக் என்ற விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பியது.


கனடாவில் சீக்கியர் தலைவர் கொலை வழக்கு: திடீர் திருப்பமாக 3 பேர் கைது!
[Saturday 2024-05-04 07:00]

கனடாவில் சீக்கிய செயற்பாட்டாளரின் கொலை வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடாவில் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட சீக்கிய செயற்பாட்டாளர் ஹர்பீர் சிங் நிஜ்ஜருடன் தொடர்புடைய கொலை வழக்கில் மூன்று நபர்களை கனடா அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.


பிரித்தானிய சிறுவன் கொலை வழக்கு: பதின்ம வயதினர் குற்றவாளி என தீர்ப்பு!
[Saturday 2024-05-04 07:00]

பிரித்தானியாவில் இளைஞர் ஆல்ஃபி லூயிஸைக் கொலை செய்த குற்றத்திற்காக 15 வயது சிறுவன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. லீட்ஸில் உள்ள ஹார்ஸ்ஃபோர்த் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் நடந்த சம்பவத்தில், 15 வயது சிறுவன் ஒருவர் மற்றொரு 15 வயது இளைஞர் ஆல்ஃபி லூயிஸைக்(Alfie Lewis) கொலை செய்த குற்றத்திற்காக குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


நோர்வேயில் சிறந்த விருதை வென்ற இலங்கையின் முதல் தமிழ் பெண்!
[Friday 2024-05-03 18:00]

யூடியூப்பில் ஒரு மில்லியனுக்கு மேல் பார்வையாளர்களால் பாராட்டப்பட்ட “ஆத்தங்கரை ஓரத்தில ” பாடலுக்கு Norway International Tamil Film Festival பெருமையுடன் பிரபாலினிக்கு சிறந்த இசை காணொளிக்கான விருதை வழங்கியிருக்கிறது. “ஆத்தங்கரை ஓரத்தில ” கிராமத்து குத்து பாட்டு” இலங்கையின் முதல் தமிழ் பெண் இசையமைப்பாளர் பிரபாலினி பிரபாகரன் எழுதி, இசையமைத்து, பாடி, நடித்து, தயாரித்த பாடல் இது.


கனடாவில் சந்தேக நபரை துரத்திய பொலிசாரால் நான்கு உயிர்கள் பலி!
[Friday 2024-05-03 18:00]

கனடாவில், மதுபானக்கடை ஒன்றில் திருடியதாக சந்தேகத்தின்பேரில் நபர் ஒருவரை பொலிசார் துரத்த, அதனால் ஏற்பட்ட விபத்தில், குழந்தை ஒன்று உட்பட நான்கு பேர் பலியான சம்பவத்தில், பலியானவர்கள் பேரக்குழந்தையைப் பார்க்க கனடா சென்ற இந்திய தம்பதியர் என்றும், அவர்கள் பார்க்கச் சென்ற அந்தக் குழந்தையும் விபத்தில் பலியாகிவிட்டதாகவும், அதிரவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.


பிரதமர் ரிஷியின் பதவிக்கு ஆபத்து!
[Friday 2024-05-03 18:00]

பிரித்தானியாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில், 30 ஆண்டுகளில், முதன்முறையாக மோசமான முடிவுகளை சந்தித்துள்ளது பிரதமர் ரிஷி சார்ந்த, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி. 1995க்குப் பிறகு கன்சர்வேட்டி கட்சி இப்படி ஒரு தோல்வியை இப்போதுதான் சந்திக்கிறது. தேர்தல் முடிவுகள் இப்படித்தான் இருக்கும் என ஏற்கனவே கருத்துக்கணிப்புகள் கூறிவந்த நிலையிலும், ரிஷியை பதவிலியிருந்து அகற்ற அக்கட்சியினர் மிகவும் தயக்கம் காட்டிவந்தனர், வருகின்றனர்.


கனடாவில் ஏதிலி அந்தஸ்து கோருவோரின் கவனத்திற்கு...!
[Friday 2024-05-03 18:00]

கனடாவில் ஏதிலி அந்தஸ்து நிராகரிக்கப்படும் நபர்கள் துரித கதியில் நாடு கடத்தப்படக்கூடிய முறைமை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்காக கனடடிய குடிவரவு மற்றும் ஏதிலிகள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் கனடாவில் கற்கும் வெளிநாட்டு மாணவர்களின் ஏதிலி அந்தஸ்து கோரிக்கை 1500 வீதமாக உயர்வடைந்துள்ளது.


டான்பாஸில் தாக்குதல் தீவிரம்: அடுத்த கிராமத்தை பிடித்த ரஷ்யா!
[Friday 2024-05-03 06:00]

ரஷ்யா, கிழக்கு உக்ரைனில் இன்னொரு கிராமத்தை கைப்பற்றியதாக தெரிவித்துள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், கிழக்கு உக்ரைனில் உள்ள பேர்டிச்சி(Berdychi) கிராமத்தை தனது படைகள் கைப்பற்றியதாக வியாழக்கிழமை அறிவித்தது. டான்பாஸ் பகுதியில் ரஷ்யா சமீபத்தில் பல்வேறு பகுதிகளை கைப்பற்றியுள்ளதன் தொடர்ச்சியாக இது இருக்கிறது.


உடை விதிமீறல்: சவுதி பெண் செயற்பாட்டாளருக்கு 11 ஆண்டு சிறை!
[Friday 2024-05-03 06:00]

சவுதி அரேபியாவின் மனஹெல் அல்-ஓடாய்பி என்ற பெண் செயற்பாட்டாளருக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் 29 வயதான உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளரும், செயற்பாட்டாளருமான மனஹெல் அல்-ஓடாய்பி(Al-Otaibi), பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தது மற்றும் அதிகாரிகளால் "மோசமானது" என்று கருதப்படும் வகையில் உடை அணிந்ததற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.


வேல்ஸ் கடற்கரையில் கிடந்த 32 வயது பெண்ணின் உடல்!
[Friday 2024-05-03 06:00]

பிரித்தானியாவின் வேல்ஸில் கடற்கரையில் 32 வயது பெண்ணின் உடல் கண்டறியப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேல்ஸின் பெம்புரோக் டாக் (Pembroke Dock) அருகே உள்ள பென்னார் (Pennar) என்ற பகுதியில் உள்ள கடற்கரையில் செவ்வாய் கிழமை மாலை 32 வயது பெண் ஒருவரின் உடல் கண்டறியப்பட்டது.


துபாயில் மீண்டும் கனமழை: சர்வதேச விமான சேவைகள் ரத்து!
[Thursday 2024-05-02 18:00]

துபாயில் மீண்டும் கனமழை பெய்துவருகிறது. இதனால் வெள்ளம் ஏற்பட்டு மக்களின் வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. மேலும், போக்குவரத்து வசதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. துபாயில் இருந்து பிற நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல விமானங்கள் திருப்பி விடப்பட்டன. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


கனடாவில் உடல் எடை குறைப்பு மருந்துக்கு அனுமதி!
[Thursday 2024-05-02 18:00]

கனடாவில் உடல் எடையை குறைக்கும் மருந்து வகைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கனடிய உடற்பருமண் அதிகரிப்பு சிகிச்சைப் பிரிவின் மருத்துவர் சஞ்சீவ் சொக்கலிங்கம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்த உடல் எடை குறைப்பு மருந்து வகை கனடாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.


இஸ்ரேல் உடனான உறவை முறித்துக் கொண்ட பிரபல நாடு!
[Thursday 2024-05-02 18:00]

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையேயான மோதல் இதுவரை இல்லாத அளவுக்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்கு பதிலடியாக, காசாவில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இவ்வாறான நிலையில், இஸ்ரேல் நாட்டுடனான உறவை முறித்துக் கொள்வதாக கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ அறிவித்துள்ளார்.


கனடாவிலிருந்து வெளியேறும் கனேடியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
[Thursday 2024-05-02 18:00]

குடியுரிமை பெற்றும், அதாவது, கனேடிய குடிமக்களானபின்பும், கனடாவிலிருந்து வெளியேறும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக சமீபத்திய ஆய்வொன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன. திங்கட்கிழமையன்று வெளியான McGill Institute for the Study of Canada என்னும் அமைப்பின் ஆய்வு முடிவுகள், கனடாவிலிருந்து வெளியேறும் கனேடியர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக தெரிவிக்கின்றன.


சூடான் உள்நாட்டுப் போர்: மண், இலைகளை உண்டு உயிர் வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட மக்கள்!
[Thursday 2024-05-02 06:00]

சூடான் நாட்டில் ஏற்பட்டுள்ள துயர நிலை காரணமாக அங்குள்ள மக்கள் மண், இலைகளை உண்டு உயிர் வாழும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சூடானில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே வெடித்த உள்நாட்டு போர், நாட்டை மோசமான பசி பட்டினியில் தள்ளியுள்ளது.


பிரித்தானியாவை உலுக்கிய சம்பவம்: உயிரிழந்த 14 வயது சிறுவனின் விவரங்கள் வெளியீடு!
[Thursday 2024-05-02 06:00]

பிரித்தானியாவின் ஹெயினால்ட் பகுதியில் நடந்த வாள் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த 14 வயது பள்ளி மாணவரின் பெயர் மற்றும் புகைப்படம் வெளியாகியுள்ளது. வடகிழக்கு லண்டனின் ஹெயினால்ட்(Hainault) பகுதியில் நேற்று காலை அதிர்ச்சியூட்டும் தாக்குதல் அரங்கேறியது.


நாளை லண்டன் மேயர் தேர்தல்: 3வது முறையாக வெற்றி பெறுவாரா சாதிக் கான்?
[Thursday 2024-05-02 06:00]

பிரித்தானியாவில், லண்டன் மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி தேர்தல் நாளை (மார்ச் 02) நடக்கிறது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள 107 உள்ளூர் அதிகாரிகளுக்கான தேர்தல், பல இடங்களில் பொலிஸ், குற்றப்பிரிவு கமிஷனர் தேர்தல் கூட இதனுடன் நடத்தப்படும். பொதுத்தேர்தலுக்கு சற்று முன்னதாக நடைபெறும் இந்த உள்ளாட்சித் தேர்தலை, பொதுத் தேர்தலின் அரையிறுதிப் போட்டியாகவே கருதப்படுகிறது.


இஸ்ரேலுக்கு ஜேர்மனி ஆயுதங்கள் வழங்கலாம்: சர்வதேச நீதிமன்றம் அதிரடி!
[Wednesday 2024-05-01 16:00]

ஜேர்மனி இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் முதலான உதவிகள் வழங்குவதை எதிர்த்து, நிகராகுவா என்னும் மத்திய அமெரிக்க நாடு, ஐ.நா சபையின் ஒரு அமைப்பான சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது. ஜேர்மனி, இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் முதலான உதவிகள் வழங்குவது, 1948ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இனப்படுகொலை குற்றத்தை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கையை மீறும் செயலாகும் என நிகராகுவா குற்றம் சாட்டியிருந்தது.


லண்டனில் மனைவியை கொடூரமாக கொலை செய்த இந்தியருக்கு நேர்ந்த கதி!
[Wednesday 2024-05-01 16:00]

பிரித்தானியாவில் மனைவியை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்த கணவனுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, லண்டனில் இந்திய வம்சாவளியினரான 25 வயதான சாகில் சர்மா தனது மனைவி மெஹக் சர்மாவுடன் வசித்து வந்துள்ளார்.


சீனாவில் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளம்: 19 பேர் பலி!
[Wednesday 2024-05-01 16:00]

தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தினால் 19 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று அதிகாலை 2.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


கனடிய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
[Wednesday 2024-05-01 16:00]

கனடிய பொருளாதாரத்தில் சிறிதளவு மாற்றம் பதிவாகியுள்ளது. நாட்டின் புள்ளிவிபரவியல் திணைக்களம் இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.5 வீதமாக அதிகரித்திருந்தது.


காசாவில் அமெரிக்காவின் மிதக்கும் தளம்!
[Wednesday 2024-05-01 07:00]

அமெரிக்க இராணுவம் காசா உதவிக்காக மிதக்கும் தளத்தை கட்டமைத்துள்ள நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மத்திய தரைகடலில் மிதக்கும் தளத்தை கட்டுவதைக் காட்டும் படங்களை அமெரிக்க இராணுவம் வெளியிட்டுள்ளது. இது காசா கடற்கரைக்கு அவசர உதவிப் பொருட்களை விரைவாக வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


லண்டன் ஹெயினால்ட் பகுதியில் நடந்த தாக்குதல்: வெளியான தாக்குதல்தாரி புகைப்படம்!
[Wednesday 2024-05-01 07:00]

பிரித்தானியாவின் ஹெயினால்ட் பகுதியில் வாள் தாக்குதலில் ஈடுபட்ட நபரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் வடகிழக்கு லண்டனின் ஹெயினால்ட்(Hainault) பகுதியில் இன்று காலை அதிர்ச்சியூட்டும் தாக்குதல் அரங்கேறியுள்ளது. ஹெயினால்ட் டியூப் நிலையம் (Hainault Tube station) அருகே வாள் ஏந்திய 36 வயது நபர் பொதுமக்களை தாக்கியதாக காவல்துறைக்கு காலை 7 மணி அளவில் தகவல் கிடைத்தது.


கனடாவில் மாயமான நபர் ஏரியில் சடலமாக மீட்பு!
[Wednesday 2024-05-01 07:00]

கனடாவில் காணாமல் போன நபரின் உடல் சென்ட் ஜார்ஜ் ஏரியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. ஒன்டாரியோ பிராந்திய காவல்துறை (OPP) செவெர்ன் டவுன்ஷிபில்(Severn Township) பகுதியில் உள்ள சென்ட் ஜார்ஜ் ஏரியில்(Lake St. George) காணாமல் போன ஒரு மனிதரின் உடலை மீட்டுள்ளது.

 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா