அரசாங்கத்தின் வாக்குறுதிகளை எமது மக்கள் முன்னிலையில் சென்று கூறுவது மாமா வேலை அல்ல. விக்னேஸ்வரனின் கீழ்த்தரமான வார்த்தை பிரயோகங்களுக்கு கூட்டமைப்பு செவிகொடுக்காது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கனடாவின் சுகாதார அமைச்சரான மார்க் ஹொலண்ட் அலுவலகத்தில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த தாயக உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவர் தனது எக்ஸ் தள கணக்கில் பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் ஈவிரக்கமற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது கொல்லப்பட்ட பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்பட்ட சித்திரவதை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் தினத்தை அடிப்படையாக கொண்டு இடம்பெற்ற கைதுகள் குறித்து கவலையடைந்துள்ளதாக அமெரிக்க செனெட் வெளியுறவுக்குழுவின் தலைவர் செனெட்டர் கார்டின் தெரிவித்துள்ளார்.
கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை காவல்துறையினர் அநாகரீகமான அடாவடியான விதத்தில் குழப்பியமை குறித்து யாழ்பல்கலைகழக மாணவர் ஒன்றியம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது
வட, கிழக்கு தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எமது பொது அபிலாசைகளை வெளிக்கொண்டுவரும் விதத்தில் நடந்து கொள்வோம் என்று தமிழ் மக்கள் கூட்டணி செயலாளர் நாயகமும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தும் யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் மாவை.சோ.சேனாதிராஜா மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனிடத்தில் இறுக்கமான நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையின் 15ஆவது ஆண்டு நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் முற்பகல் 10.30 மணியளவில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
எமது பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய எம் மக்களே!
தமிழினப்படுகொலை முள்ளிவாய்க்காலில் உச்சந்தொட்டு இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைகின்றது. ஒவ்வொரு படுகொலைக்குப் பின்னரும் “இனிமேல் இது நடக்கவே கூடாது” என்ற உணர்வு பிரவாகம் வலுவாக எழுந்தாலும், அதுவே தொடர்கின்றது இனிமேல் நடக்கவே கூடாது என்ற உணர்வு பிரவாகம் அர்த்தமற்றதாகிவிட்டது.
முள்ளிவாய்க்கால் நினைவு தின நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்றது.
வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இணைந்து குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்
இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று வடக்கு -கிழக்கு பகுதிகளில் நினைவு கூறப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் மன்னாரில் இன்று காலை 8.30 மணியளவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம் பெற்றது.
தமிழினப் படுகொலையின் வரலாறுகளை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் நோக்கில் அரச பயங்கரவாதத்தினால் நேர்ந்த இனப்படுகொலைகளை திகதி வாரியாக தொகுத்து யாழ்ப்பாணத்தில் ஆவண காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களின் ஆத்மசாந்தி பிரார்த்தனை, பிதிர்க்கடன் நிறைவேற்றல் இன்றைய தினம் சனிக்கிழமை முள்ளிவாய்க்கால் கப்பல் வீதியில் உள்ள கடற்கரைப் பகுதியில் நடைபெற்றது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று கொழும்பில் நடைபெற்றது. சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர்களால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வு இன்று காலை 9.30 மணிக்கு வெள்ளவத்தை புகையிரத நிலையத்துக்கு அண்மையிலுள்ள கடற்கரையில் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் பல்கலைக் கழத்திலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வானது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபியில் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் - உடுவில் பகுதியில் மரத்திலிருந்து தவறிவிழுந்த இளைஞன் ஒருவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
இதில் ஆலடி உடுவில் மானிப்பாயைச் சேர்ந்த சசிக்குமார் ரூபின்சன் என்ற 20 வயது இளைஞனே உயிரிழந்தவராவார்.
முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 15ஆம் அண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று 18 ஆம் திகதி சனிக்கிழமை
முற்பகல் 10.30 மணிக்கு முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நடைபெறவுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு சர்வதேச பொறிமுறையில் தீர்வுபெற்றுத்தர வேண்டுமென வடக்கு, கிழக்கு மாகாணங்களின் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் சங்கப்பிரதிநிதிகள் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் கல்லமார்ட்டிடம் வலியுறுத்திக் கூறியுள்ளனர்.
பதினைந்து வருடங்கள் சென்றுவிட்டன. இது போன்ற நாட்களில் தான் எல்லாமும் நடந்தேறியது. "எங்களை காப்பாற்ற எவராவது வரமாட்டார்களா?" என்னும் ஏக்கத்துடன் எங்கள் மக்கள் மரண உலகின் கைதியானார்கள். உலகம் காப்பாற்றும் என்று நாங்கள் நம்பினோம் - எங்களால் முடிந்தது எல்லாம் செய்தோம் - இறுதியில் எமது மக்கள் கொன்றொழிக்கப்பட்டனர் என்னும் செய்தி எங்களுக்கு கிடைத்தது.
தமிழ் இனப்படுகொலையின் உச்சக் கட்டமான 2009இல் முள்ளிவாய்க்காலில் நடத்தப்பட்ட இன அழிப்பின் 15ஆவது நினைவு ஆண்டு. இனப்படுகொலை என்பது ஒரு சில குறிப்பிட்ட நிகழ்வுகளால் மட்டும் அடையாளப்படுத்தப்படுவதில்லை. இது ஒரு தொடர்ச்சியான செயல்முறை. ஒரு குழுவை அல்லது இனத்தை அகற்றுவதற்கும் அழிப்பதற்கும் குறிப்பிட்ட தரப்பினால் திட்டமிட்டு, தொடர்ச்சியாக செயற்படுத்தப்படும் செயல்முறை. சுதந்திரம் அடைந்ததிலிருந்து இலங்கை அரசானது இனப்படுகொலையின் பாதையிலேயே திட்டமிட்டுப் பயணித்துக் கொண்டிருக்கிறது.
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்சுக்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்குக்கும் இடையில் நேற்று சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
வவுனியா- தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபருடன் தொடர்பில் உள்ள பெண் கிராம அலுவலரால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சாட்சியாளர் வவுனியா நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
போர் என்பது வெற்றியல்ல அது நாட்டினதும் அல்லது மனித குலத்தினதும் தோல்வியாகும். 30 வருட கால யுத்தம் இழப்புக்களை மாத்திரமே மிகுதியாக்கியுள்ளது. வெறுப்புக்கு பதிலாக அன்பை வெளிப்படுத்துவோம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நாட்டு மக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
திருகோணமலை - மூதூர் - சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வருக்கும் மூதூர் நீதிமன்றம் இன்று பிணை வழங்கி விடுதலை செய்துள்ளது.
பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அர்த்தபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் அதற்கு காரணமானவர்கள் அனைவரையும் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.